அசட்டுச் சிரிப்பால் 14 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சீன அதிகாரி
பெய்ஜிங்: விபத்தைப் பார்வையிடச் சென்ற இடத்தில் சிரித்ததால், சீன அதிகாரி ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது சீன நீதிமன்றம்.
சிரித்ததெற்கெல்லாமா சிறைத் தண்டனைக் கொடுப்பார்கள் என அதிர்ச்சியடையாதீர்கள். சிரிப்பதற்கும் இடம், பொருள், ஏவல் இருக்கிறது. ஆனால், சிலர் சமயமறியாமல் சிரித்து பிரச்சினையில் சிக்கிக் கொள்வதுண்டு.
அப்படித் தான், சீன அதிகாரி ஒருவர் கட்டிட இடிபாடுகளைப் பார்வையிடச் சென்றபோது, சம்பவ இடத்தில் அசட்டுத் தனமான சிரிப்பொன்றைச் சிரித்து வைக்க, அதன் விளைவாக தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

பயங்கர விபத்து.....
சீனாவில் உள்ள ஷான்ஜி மாகாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கை உயர் அதிகாரியாக பணியாற்றியவர் யாங் டாகாய். கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்பகுதியில் நடந்த ஒரு விபத்தொன்றில் சிக்கி 36 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். சம்பவ இடத்தை பார்வையிட சென்றார் அதிகாரி யாங் டாகாய்.

சிரித்து சிக்கிக் கொண்ட அதிகாரி......
மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் பேசிக் கொண்டிருந்த யாங், எதேச்சையாக சிரித்து வைக்க, அக்காட்சியைப் படம் பிடித்த பத்திரிக்கையாளர் ஒருவர் அதனை இணைய தளாத்தில் வெளியிட்டு விட்டார்.

மக்கள் கோபம்....
படத்தில் யாங் கையில் ஆடம்பர கைக்கடிகாரம் அணிந்திருந்ததும், விலை உயர்ந்த பல சொகுசு பொருட்களை அணிந்திருக்கும் படங்களும் வெளியானதால் மக்கள் கடும் கோபத்திற்கு ஆளானார்கள்.

சகோதரர் கடிகாரம்....
விபத்தை பார்வையிட்ட போது சிரித்தது, ஆடம்பர பொருட்களை அணிந்திருந்தது என மக்களின் ஏகோபித்த கண்டனத்திற்கு ஆளானார் யாங். இதனால் ‘சகோதரர் கைக்கடிகாரம்' என்ற புனைப்பெயருடன் அவரை அழைக்க ஆரம்பித்து விட்டார்கள் மக்கள்.

லஞ்சம், ஊழல்....
அவரைப் பற்றி விசாரணை மேற்கொண்டதில், லஞ்ச, முறைகேடு விசாரணை வளையத்தில் சிக்கினார் யாங். ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதும், வங்கி கணக்கில் முறைகேடாக ரூ.5 கோடியை சேமித்து வைத்திருப்பதையும் கண்டறிந்தனர் அதிகாரிகள்.

உற்சாகப் படுத்தவே சிரித்தேன்....
இதனைத் தொடர்ந்து யாங் பேரில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த யாங், ' சட்டபூர்வ வருமானத்தில் சொகுசு கடிகாரத்தை வாங்கியதாகவும், விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி ஊழியர்களை உற்சாகப்படுத்தவே முயற்சி செய்தேன்' எனவும் விளக்கமளித்தார்.

14 ஆண்டுச் சிறை....
ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, யாங் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டதால் அவருக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications