மூளையில் ஏற்பட்ட கட்டி.. உயிருக்கு போராடும் இலக்கியா.. நீங்கள் உதவினால் காப்பற்றலாம்!
கோவை: கோவை மருத்துவமனையில், மூளை கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் பெண்ணுக்கு உங்களால் முடிந்த, நிதி உதவி வழங்குங்களேன்.
22 வயதுதான் ஆகிறது இலக்கியாவுக்கு. ஆனால், அதற்குள் அப்படி ஒரு மோசமான வியாதி அவருக்கு. மூளையில் கட்டி இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர். கோவையிலுள்ள பிஎஸ்ஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இலக்கியாவுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

இலக்கியாவின் தந்தை, தினக்கூலி தொழிலாளி. ஆனால், இலக்கியாவின் மருத்துவ செலவிற்கு, 2,00000 ரூபாய் தேவைப்படுகிறது. எனவே இலக்கியாவின் மருத்துவ செலவிற்கு நன்கொடைகளைத்தான் நம்பியுள்ளது அவரது குடும்பம். இலக்கியாவின் சகோதரி, ஸ்வேதா, பொதுமக்களிடம் நிதி உதவி கோரியுள்ளார்.
தனது சகோதரியை காப்பாற்ற வீட்டுக்கு அழைத்துச் செல்ல பொதுமக்களின் நன்கொடை ரொம்பவே அவசியம் என்று வேண்டுகோள்விடுத்துள்ளார் ஸ்வேதா. நீங்களும் உங்களால் முடிந்த நிதியுதவியை இலக்கியாவுக்கு செய்து, அவர் நலம்பெற உதவுங்களேன்.












Click it and Unblock the Notifications