பெரும் பனிச்சரிவு.. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
காஷ்மீர்: குப்ராவா அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 3 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்து இருக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மலைப் பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாராவில் அருகே மச்சி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள அல்மோராவில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பகல் 12 மணியளவில் நடைபெற்ற இந்த நிலச்சரிவில் சவுவிக் ஹஸ்ரா, முகேஷ்குமார், கெய்வாட் மனோஜ் லக்ஷ்மண் ராவ் ஆகியோர் உயிரிழந்ததாக மூத்த காவல் அதிகாரி உயிரிழந்தார்.
உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்து இருக்கிறார். ராணுவ வீரர்களின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications