விசா விதிகளை மதிக்காத 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள்.. துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு
அபுதாபி: விசா விதிகளை பின்பற்றாததால் 50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு துபாயினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் துபாயில் உள்ள இந்திய தூதரகம், டிராவல் நிறுவனங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் இருந்து உறுதி செய்யப்பட்டது. இதை அறிந்த இந்திய தூதரக அதிகாரிகள் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவி செய்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் விதிகளின் படி , டிராவல் விசா வைத்திருக்கும் நபர் ஹோட்டலில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது உறவினரின் பரிந்துரை வேண்டும். அத்துடன் திரும்பி செல்வதற்கான புக்கிங் டிக்கெட் ஆகியவை வைத்திருக்க வேண்டும். இதுதான் விசா விதிகள்.
இந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள், விசா வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காததால் துபாயினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் துபாய் விமான நிலையத்திலேயே சிக்கியுள்ளார்கள்.
14 பேர் துபாயினுள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் எல்லாம் நேற்று இரவு முதல் துபாய் விமான நிலையத்தில் உள்ளார்கள். இவர்களுக்கு இந்திய தூதரகம் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications