தீவிரவாதத்திற்கு எதிராக இணைவோம்.. இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தில் சுஷ்மா அழைப்பு.. பாக்.கிற்கு குட்டு
அபுதாபி: தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு அனைத்து நாடுகளும் இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று இஸ்லாமிய கூட்டுறவு நாடுகள் அமைப்பில், அழுத்தந்திருத்தமாக கருத்தை முன் வைத்தார்.
இஸ்லாமிய நாடுகளில் கூட்டுறவு அமைப்பு (OIC) மாநாடு அபுதாபியில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.
முதல் முறையாக இந்தியாவிற்கு இப்படி ஒரு கவுரவத்தை இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு வழங்கியது.

சுஷ்மா சுவராஜ் பங்கேற்பு
அதேநேரம், சுஷ்மா ஸ்வராஜை சிறப்பு அழைப்பாளராக வரவேற்பதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பை பதிவு செய்தது. மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என பாகிஸ்தான் அறிவித்தது. இருப்பினும், இதை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு பொருட்படுத்தவில்லை. சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சுஷ்மா சுவராஜ் இன்று உரையாற்றினார்.

மனிதாபிமானம்
தனது உரையில் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: மனிதாபிமானத்தை காப்பாற்ற வேண்டுமானால், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் மற்றும் அவற்றுக்கு நிதி உதவி செய்யும் நாடுகளுக்கு (மறைமுகமாக பாகிஸ்தானுக்கு குட்டு) அவற்றை நிறுத்திக் கொள்ளுமாறு நாம் வலியுறுத்திச் சொல்ல வேண்டியது அவசியமாக உள்ளது. தீவிரவாதம் பயங்கரவாதம் என பல பெயர்களில் அது மக்களுக்கு அச்சுறுத்தலாக நிலவுகிறது.

தீவிரவாதத்திற்கு எதிராக
உயிர்களை தீவிரவாதம் அழிக்கிறது. நாடுகளை புரட்டிப்போடுகிறது. இந்த உலகத்தை மோசமான வாழ்விடமாக தீவிரவாதம் மாற்றுகிறது. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து உலகளாவிய தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் இந்த மாநாட்டிற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 1.3 பில்லியன் இந்தியர்களின் வாழ்த்துக்களை சுமந்து வந்து உள்ளேன். இதில் 185 மில்லியன், முஸ்லிம் சகோதர, சகோதரிகளின் வாழ்த்துக்களும் அடங்கும்.

அமைதியான இஸ்லாம்
இஸ்லாம் என்பதற்கு அமைதி என்ற பொருளும் உண்டு. அல்லாவின் 99 பெயர்களில் ஒன்று கூட வன்முறை என்று பொருள்படாது. அதேபோல் உலகத்தில் உள்ள ஒவ்வொரு மதமும், அமைதியையும் சகோதரத்துவத்தையும் மட்டும்தான் போதிக்கின்றது. பழமையான, ரிக் வேதத்தில், "கடவுள் ஒருவரே, மனிதன் அவரை பல பெயர்களில், வடிவங்களில் வணங்குகிறான்" என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால், மதத்தை தவறாக சித்தரித்து தீவிரவாதம் வளர்த்தெடுக்கப்படுவதை பார்க்க முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

புறக்கணித்த பாகிஸ்தான்
மொத்தம் 57 முஸ்லிம் நாடுகள் இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் இந்தியாவுக்கு சிறப்பு அழைப்பு வழங்கியதற்காக உறுப்பு நாடுகளில் ஒன்றான, பாகிஸ்தான் இதை, புறக்கணித்து விட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications