கவர்னர் என்ற பதவியே தேவையில்லாதது... இயக்குனர் கவுதமன் தடாலடி!!
கவர்னர் என்ற பதவியே தேவையில்லாதது என இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

அரியலூர்: கவர்னர் என்ற பதவியே தேவையில்லாதது என திரைப்பட இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த இயக்குனர் கவுதமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து காவல்துறை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2004ல் நடைபெற்றதாக கூறப்படும் இச்சம்பவம் தற்போது புகாராக தெரிவிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா என்ற சந்தேகம் உள்ளது.
அதனை காவல்துறை விசாரிக்க வேண்டும். பாலியல் குற்றம் சாட்டுபவர்கள் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் புகார் அளிக்க வேண்டும்.
[எல்லாவற்றுக்கும் ஒரு 'லிமிட்' உள்ளது.. ஆளுநர் மாளிகை எச்சரிக்கை!]
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
கவர்னர் என்ற பதவியே ஜனநாயக நாட்டில் தேவை இல்லாத ஒன்று. இவ்வாறு இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications