பட்டியலின நபரை காலில் விழ வைத்த சம்பவம்.. திமுக நிர்வாகி தலைமறைவு .. அரியலூரில் அதிர்ச்சி
அரியலூர்: பட்டியலின நபரை காலில் விழ வைத்த விவகாரத்தில் திமுக நிர்வாகி ஒருவர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம் வாளரகுறிச்சியை சேர்ந்தவர் பாஜக நிர்வாகி அன்பரசன். இவர் வீட்டில் சுப நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதையொட்டி வேறு சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் பட்டாசு வெடித்ததாக தெரிகிறது.

இதையடுத்து அடுத்த நாளே மாற்று சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் உள்ள கடைக்கு அன்பரசனின் சகோதரர் திருநாவுக்கரசர் சென்றுள்ளார். அப்போது பட்டாசு வெடித்தது குறித்து கேட்டு அச்சமூகத்தினர் தகராறு செய்ததாக தெரிகிறது.
அப்போது ஊர் மக்கள் முன்பு திருநாவுக்கரசுவை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்ததாக தெரிகிறது. இது குறித்து அன்பரசன் அளித்த புகாரின் பேரில் தீண்டாமை வன்கொடுமை உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் ராஜேஷ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் திமுக நிர்வாகி கண்ணன் உள்பட மேலும் 5 பேரை இரு தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications