”ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை..” கங்கைகொண்ட சோழபுரத்தில் அறிவித்த மோடி
அரியலூர்: 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி இன்று கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழன் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டார். அப்போது ராஜராஜ சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்டமாக சிலை அமைக்கப்படும் என்று கூறினார்.
2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி, நேற்று தூத்துக்குடியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.462 கோடியில் புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தையும் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து இன்று காலையில் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.

தமிழில் பேசிய மோடி
அப்போது சோழகங்கத்தில் இருந்து கங்கைகொண்ட சோழபுரம் வரை 3.8 கிமீ தூரம் பிரதமர் மோடி ரோடு ஷோ மேற்கொண்டார். தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். வாரணாசியில் இருந்து கொண்டு வந்த கங்கை நீரை சோழீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய கொடுத்தார்.
இதனை தொடர்ந்து ராஜராஜ சோழன் முப்பெரும் விழாவானது இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியோடு தொடங்கியது. இசை நிகழ்ச்சி முடிந்த பிறகு பேசிய பிரதமர் மோடி, வணக்கம் சோழமண்டலம் என்று தமிழில் பேசி உரையை தொடங்கினார். பிரதமர் மோடி பேசியதாவது:-
பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்
நம்முடைய பாரம்பரியத்தின் மீது பெருமித உணர்வை முன்னெடுக்கும் வேளையில், இங்கு மேலும் ஒரு உறுதிப்பாட்டை நான் அளிக்கிறேன். வரவிருக்கும் கால கட்டத்திலே நம் தமிழ்நாட்டில் ராஜ ராஜ சோழன் அவருடைய மைந்தன் மகத்தான ஆட்சியாளர் முதலாம் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்டமான சிலையை அமைப்போம். இந்த உருவச்சிலைகள் நமது வரலாற்று விழிப்புணர்வின் நவீன கொடிமரங்கள் ஆகும்.
ஜனநாயகத்தின் தாய் சோழராட்சி.. சைவ பாரம்பரியத்தில் தமிழகம் முக்கிய மையமாக திகழ சோழர்களே காரணம்.. சைவ சித்தாந்தம் தீர்வளிக்கும் பாதை, அன்பே சிவம்.. இவ்வாறு மோடி கூறினார். மேலும் பிரதமர் மோடி பேசியதாவது:-
எனக்கு கிடைத்த பெரும் பேறு..
சோழர்கள் குறித்த கண்காட்சியை பார்த்து வியந்து போனேன்.. அனைவரும் இந்த கண்காட்சியை பார்வையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.. 140 கோடி மக்களின் வளர்ச்சிக்காக நான் எனது வேண்டுதலை சிவனிடம் வைத்துள்ளேன். 1000 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இறைவனை தரிசித்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெரும் பேறு..
நம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று
சோழ மன்னர்களின் அரசியல் மற்றும் வணிக தொடர்பு என்பது மாலத்தீவு தொடங்கி, கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரந்து விரிந்து இருந்தது. சோழர்களுடைய சாதனைகளானது இந்தியாவுடைய பலத்திற்கு எடுத்துக்காட்டு. நம் இந்திய பாரதத்தின் அடையாளங்கள் ராஜராஜன், ராஜேந்திர சோழன் ஆகிய இரு பெயர்கள்.
பிரிட்டிஷார் இல்லை.. நம் ஜனநாயகத்துக்கான முன்னோடி சோழராட்சி தான். ஜனநாயகத்தின் பிறப்பிடமாய் சோழர்களின் குடவோலை முறை திகழ்ந்தது. நீர் மேலாண்மையில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் சோழர்கள். சோழ சாம்ராஜ்ஜியம் நம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று.. நாட்டின் புது நாடாளுமன்றத்தில் தமிழ் மொழி ஒலித்தது. தமிழர் கலாச்சாரத்தோடு இணைந்த செங்கோலானது நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications