பெங்களூரு மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை.. மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூரு மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் அறிவித்துள்ளார்.
இந்திய அளவில் கர்நாடகா மாநிலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் சென்னையில் ஜூன் மாதத்தில் இருந்ததை போன்று தொற்று பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெங்களூருவில் மட்டும் 57,396 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதால் பெங்களூரு மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை செய்யப்படும் என பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " பெங்களூருவில் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் வாங்கப்படுகிறது. இதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த விரும்புவது இல்லை.
எனவே பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 8 மண்டலங்களிலும் மக்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை செய்ய உள்ளோம். எனவே மக்கள் மண்டல அலுவலக செல்போன் எண்களை தொடர்பு கொண்டு இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம். ஏழை, எளிய மக்களும் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்லாம். நோய் பரவுவதை கட்டுப்படுத்த இந்த முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 50 ஆயிரம் ரேபிட் ஆன்டிஜென் கருவிகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று இருந்தோம். அந்த கருவிகள் மூலம் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு உள்ளோம். 70 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்களை நகர் முழுவதும் அனுப்பி இருக்கிறோம்.. இலவச கொரோனா பரிசோதனை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பெங்களூருவில் 12,668 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது" என்றார்
பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 8 மண்டலங்களின் உதவி மையங்களின் தொலைபேசி எண்கள் விவரம்:
* எலகங்கா - 9480685948
* மகாதேவபுரா - 080-23010101/ 23010102
* பொம்மனஹள்ளி - 8884666670
* ஆர்.ஆர்.நகர் - 080-28601050/ 28600954
* பெங்களூரு தெற்கு - 8431816718
* பெங்களூரு கிழக்கு - 7411038024
* பெங்களூரு மேற்கு - 080-68248454
* தாசரஹள்ளி - 080-28394909/3688
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications