தமிழகத்தில் குண்டுவெடிக்கும் என்ற தகவல் வதந்தி.. பொய் தகவல் பரப்பியவர் பெங்களூரில் கைது
பெங்களூர்: தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குண்டுவெடிக்கும் என வதந்தி பரப்பிய மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து ராமேஸ்வரம் கடலோர கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூர் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மர்ம போன் ஒன்று வந்தது. அதில் ஒசூரில் இருந்து பேசிய நபர், ஒரு திடுக் தகவலை அளித்தார்.

நாசவேலை
அவர் கூறுகையில் ஆந்திரம், தமிழகம், புதுவை, தெலுங்கானா, மகாராஷ்டிரம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமான நகரங்களில் குண்டுவெடிக்கும். இந்த நாசவேலைக்காக ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் நுழைந்துள்ளார்கள்.

தகவல்
தென்னக ரயில்களில் குண்டுவெடிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறிய அந்த மர்ம நபர் போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து பெங்களூர் போலீஸார் மேற்கண்ட மாநிலங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

நேற்று முதல் சோதனை
இதையடுத்து தமிழக ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், சோதனை நடவடிக்கைகளும் நேற்று முதல் தீவிரப்படுத்தப்பட்டது.

வதந்தி
மேலும் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வாகன சோதனைகளும் லாட்ஜ்களில் முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக தகவல் தெரிவித்தவர் வதந்தி பரப்பினார் என தெரியவந்தது.

லாரி ஓட்டுநர்
இதுபோல் வதந்தி பரப்பிய லாரி ஓட்டுநர் சுவாமி சுந்தரமூர்த்தி பெங்களூரில் கைது செய்தார். இவர்தான் காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சுவாமி சுந்தரமூர்த்தி முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications