தமிழகத்தில் குண்டுவெடிக்கும் என்ற தகவல் வதந்தி.. பொய் தகவல் பரப்பியவர் பெங்களூரில் கைது
பெங்களூர்: தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குண்டுவெடிக்கும் என வதந்தி பரப்பிய மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து ராமேஸ்வரம் கடலோர கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூர் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மர்ம போன் ஒன்று வந்தது. அதில் ஒசூரில் இருந்து பேசிய நபர், ஒரு திடுக் தகவலை அளித்தார்.

நாசவேலை
அவர் கூறுகையில் ஆந்திரம், தமிழகம், புதுவை, தெலுங்கானா, மகாராஷ்டிரம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமான நகரங்களில் குண்டுவெடிக்கும். இந்த நாசவேலைக்காக ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் நுழைந்துள்ளார்கள்.

தகவல்
தென்னக ரயில்களில் குண்டுவெடிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறிய அந்த மர்ம நபர் போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து பெங்களூர் போலீஸார் மேற்கண்ட மாநிலங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

நேற்று முதல் சோதனை
இதையடுத்து தமிழக ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், சோதனை நடவடிக்கைகளும் நேற்று முதல் தீவிரப்படுத்தப்பட்டது.

வதந்தி
மேலும் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வாகன சோதனைகளும் லாட்ஜ்களில் முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளதாக தகவல் தெரிவித்தவர் வதந்தி பரப்பினார் என தெரியவந்தது.

லாரி ஓட்டுநர்
இதுபோல் வதந்தி பரப்பிய லாரி ஓட்டுநர் சுவாமி சுந்தரமூர்த்தி பெங்களூரில் கைது செய்தார். இவர்தான் காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சுவாமி சுந்தரமூர்த்தி முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications