யூடியூப் பார்த்து கொள்ளைலாமா அடிப்பாங்க,85 லட்சத்தை ஆட்டைய போட்டு கம்பியை கவுண்ட் பண்ணும் இஞ்சினியர்
பெங்களூரு: ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்ப்பட்ட நஷ்டத்தால், யூடியூபில் வீடியோ பார்த்து SBI வங்கியில் கத்தி முனையில் 85 லட்சம் ரூபாய் திருடிய மென்பொறியாளர் சிக்கினார்
Recommended Video
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் மென்பொறியாளர் தீரஜ். OLYMP என்னும் ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்து நஷ்டமடைந்தார்.. தொடர்ந்து வங்கிகளில் கடன் பெற்று முதலீடு செய்து கடன்காரணான நிலையில் வங்கிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது..

ஒருக்கட்டத்தில் திருடுவது என முடிவெடுத்த தீரஜ் கூகிள், யூடியூப் உள்ளிட்டவற்றில் தனிநபராக திருடுவது எப்படி என வீடியோக்களை பார்த்து மக்கள் கூட்டம் குறைந்த நேரத்தில் வங்கியில் திருடுவதென முடிவெடுத்த தீரஜ், பொங்கல் பண்டிகையை சமயம் பார்த்து பெங்களூர் BTM லேஅவுட் பகுதியில் உள்ள SBI வங்கி கிளையில் கத்தி முனையில், முகமூடி அணிந்து 85 லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்றிருந்தார்
15ஆம் தேதி வங்கிகொள்ளையடித்த பணத்தை தீரஜ், தான் பெற்ற 40 லட்சம் ரூபாய் கடனில் கடனாளிகளுக்கு திருப்பி கொடுத்து இறுதியாக கடன் கொடுக்க சென்றபோது கைது செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. மடிவாளம் போலிசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் எஸ்பி ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷி, சிசிடிவி கேமராக்களை கொண்டு விசாரணை மேற்க்கொண்டதில் தீரஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கடனாளியான தீரஜ், கொள்ளையனாகி தற்போது கம்பி எண்ணவும் சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications