மீடூ புகார்.. அர்ஜூன் செம சூடாக இறங்கி விட்டார்.. ஆனால் தமிழ்நாடு மகா அமைதியா இருக்கே!
தன் மீதான புகார்களை ரத்து செய்ய நடிகர் அர்ஜூன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
Recommended Video

பெங்களூரு: தன் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் சம்பந்தப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் அர்ஜூன் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.
இதுவரை அளிக்கப்பட்டுள்ள மீ டூ விவகாரங்களில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் சம்பந்தப்பட்ட புகார் மீது தான் அடுத்தடுத்து நடவடிக்கை உடனடியாக நடந்து வருகிறது. நிபுணன் படத்தில் நடித்தபோது, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஸ்ருதி ஹரிகரன், நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் அளித்தார். இது கர்நாடகம், தமிழகம் என இரு மாநிலங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக இதுகுறித்து அர்ஜுன் மறுப்பு தெரிவித்தார்.

மான நஷ்ட வழக்கு
இருந்தாலும், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இரு தரப்பையும் அழைத்து பேசுகிறோம் என சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் கூட்டத்தில் பேசிய அர்ஜூன், "நான் சமசரம் செய்து கொள்ள மாட்டேன், என் மீது அவர் எப்படி பாலியல் புகார் அளிக்கலாம்? ரூ.5 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்போகிறேன்" என்று சொல்லிவிட்டு, அது சம்பந்தமான நீதிமன்ற பணிகளிலும் அதிரடியாக இறங்கினார்.

4 பிரிவுகளில் வழக்கு
இது ஒரு பக்கம் என்றால், ஸ்ருதி ஹரிஹரன் நேராக பெங்களூரு போலீசில் போய் நடிகர் அர்ஜூன் மீது புகார் அளித்தார். அதன்பேரில் பாலியல் துன்புறுத்தல், பெண்களை அவதூறு செய்வது, மிரட்டல், பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதத்தில் நடப்பது என்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் அர்ஜூன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஐகோர்ட்டில் மனு
இந்த வழக்கு சம்பந்தமாக அர்ஜூன் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனையும் நடத்தினார். இதையடுத்து தன் மீதுதொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் அர்ஜுன் மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல, அர்ஜூனின் வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யாவும் நேற்று கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

நாளை விசாரணை
அதில், அர்ஜூன் மீதான பாலியல் புகார் வழக்கை நேற்றைய தினமே விசாரிக்க வேண்டும் என்றார். அதற்கு நீதிபதி தினேஷ்குமார், விசாரணையை நாளை (2-ம் தேதி) நடத்துகிறேன் என்று அறிவித்தார். இதையடுத்து இந்த விசாரணை நாளை நடைபெற உள்ளது. ஒரு பக்கம் ஸ்ருதியும், மற்றொரு பக்கம் அர்ஜூனும் மாறி மாறி புகார்களை சொல்லி வருகின்றனர். காவல்துறையும், நீதித்துறையும் இந்த விவகாரங்களை சூடாக விசாரித்தும் வருவதால் கன்னட சினிமாவில் பரபரப்பு தொற்றிக் கொண்டே இருக்கிறது.

ஆதாரம் தேடுகிறார்
ஆனால் நம் மாநிலத்தில் மீ டூ புகார் தொடர்பாக ஒரு முன்னேற்றத்தையும் காணோம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஒருவர் தொடர்ந்துள்ளார், இன்னொருவர் வழக்கை தொடர போகிறேன் என்று மட்டும் சொல்லி இருக்கிறார். ஆனால் புகார் அளித்த முக்கியமும் மூலமுமானவர் இன்னமும் ஆதாரத்தை தேடறார்.. தேடறார்.. தேடிக் கொண்டே இருக்கிறார்!!!
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications