18+ வீடியோக்களை பகிர்ந்து.. சொந்த மனைவிக்கு "பாய் பிரண்ட்" தேடிய கணவர்.. பெங்களூரில் பரபர WIFE SWAP!
பெங்களூர்: கேரளாவை தொடர்ந்து பெங்களூரிலும் இளைஞர் ஒருவர் தனது மனைவியை பிற ஆண்களுடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் ரீதியாக அந்த இளைஞர் தனது மனைவியை பிற ஆண்களுடன் பகிர்ந்து உள்ளார்.
கேரளாவில் சமீபத்தில் கோட்டயம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் Wife Swap என்ற குழு இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 14க்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப் குழுக்களில் ஆண்கள் தங்கள் மனைவிகளை பகிர்ந்து கொண்டதும், இதற்கு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பல விஐபிக்கள், அரசு அதிகாரிகள் கூட தங்கள் மனைவிகளை பகிர்ந்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. கோட்டயத்தை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் தனது கணவர் தன்னை பிற ஆண்களுடன் உறவு கொள்ள வற்புறுத்துவதாக கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
டூர் போன கணவர்.. கோபத்தில் மனைவி எடுத்த ஏல முடிவு.. வாங்க போட்டி போட்ட 13 பெண்கள்!
விசாரணை
கேரள போலீசார் விசாரணையின் முடிவில் Wife Swap என்ற குழு இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1000-க்கும் மேற்பட்ட தம்பதிகள் இந்த குழுவில் இயங்கி வந்துள்ளனர். மனைவியை பகிர்ந்து கொள்வது, குழு பாலியல் உறவு மேற்கொள்வது, தனது மனைவியை பிற ஆண்கள் பாலியல் உறவு கொள்வதை வேடிக்கை பார்ப்பது என்று பெரிய கும்பலே இந்த குழுவில் இயங்கி வந்துள்ளது. இந்த குழுவால் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த குழு கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவில் இதை பற்றிய விசாரணை நடந்து வருகிறது.
பெங்களூர்
கேரளாவை தொடர்ந்து தற்போது பெங்களூரிலும் Wife Swap சம்பவம் நடந்து உள்ளது. அதன்படி 32 வயது நிரம்பிய வினய் குமார் என்ற யாவரும் அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் சிங்காசந்திரா என்ற பகுதியில் இவர்கள் வசித்து வந்தனர். இரண்டு பேரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் குமாருக்கு தனது மனைவி வேறு ஆண்களுடன் பாலியல் உறவு கொள்வதை பார்க்கக் விருப்பம் ஏற்பட்டுள்ளது.
Wife Swap
இதனால் தனது மனைவிக்கு இந்த விருப்பம் இருக்கிறதா என்று கேட்டு இருக்கிறார். இதற்கு மனைவியும் ஓகே சொன்ன நிலையில், தனது மனைவிக்கு செக்ஸ் பார்ட்னர் தேடும் பணியில் குமார் இறங்கி இருக்கிறார். இதையடுத்து ட்விட்டரில் பொய்யான பெயரில் கணக்கு உருவாக்கி, நாங்கள் பெங்களூரில் வசித்து வருகிறோம். எனது மனைவியுடன் உறவு கொள்ள விரும்பும் நபர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மனைவியை பகிர்ந்தார்
இதையடுத்து அவரை சில பெங்களூர் ஆண்கள் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இதையடுத்து தனது மனைவியின் 18+ புகைப்படங்கள், வீடியோக்களை குமார் டெலிகிராமில் அந்த ஆண்களுக்கு அனுப்பி உள்ளார். அதோடு அவர்களை வீட்டிற்கு அழைத்து மனைவியுடன் பாலியல் உறவு கொள்ளவும் அனுமதித்து இருக்கிறார். இவர்களிடம் குறிப்பிட்ட தொகையை வாங்கி இருக்கிறார். இப்படி பெங்களூரை சேர்ந்த பல ஆண்களை தனது வீட்டிற்கு அழைத்து தனது மனைவியுடன் உடலுறவு கொள்ள அனுமதித்து இருக்கிறார்.
எப்படி?
இந்த நிலையில்தான் ட்விட்டர் பயனாளி ஒருவர் இது தொடர்பாக பெங்களூர் போலீசில் புகார் அளிக்க, தம்பதிகள் இருவரும் பெங்களூர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 67 மற்றும் 67A சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீஸ் நடத்திய சீக்ரெட் ரெய்டில் இந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டதாக பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர். பல ஆண்களுடன் இவர் தனது மனைவியை உறவு கொள்ள வைத்து இருக்கிறார். தனது மனைவி பிற ஆண்களுடன் உறவு கொள்வதை பார்க்க தனது சந்தோசமாக இருந்ததாக வினய் குமார் போலீஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.