கர்நாடகாவில் விநாயகர் சிலைகளுக்கு எத்தனை சோதனை! போலீஸ் 'கைதை' தொடர்ந்து 'ஆட்டைய' போட்ட திருடர்கள்!
பெங்களூர்: கர்நாடகாவில் விநாயகர் சிலைகளுக்கு மிகப் பெரும் சோதனை காலமாகிவிட்டது. கர்நாடகாவின் மண்டியா நாகமங்களாவில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட போது மோதல் வெடித்ததால் விநாயகர் சிலையை போலீசார் 'கைது' செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதனை பிரதமர் மோடியும் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது மண்டியா அருகே மத்தூரில் ஒரு கும்பல் இரவோடு இரவாக விநாயகர் சிலையை திருடிச் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தெருக்களில் வைக்கப்பட்டு ஒரு வார வழிபாட்டுக்குப் பின்னர் நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வுகளின் போது பல மாநிலங்களில் மோதல்கள் நிகழ்ந்துள்ளன.

கர்நாடகா மாநிலம் மண்டியா நாகமங்களாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வின் போது இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதல் மிகப் பெரும் வன்முறையாக உருவெடுத்தது. இரு சக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அங்கு ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. அப்போது தெருவில் கைவிடப்பட்ட விநாயகர் சிலைகளை போலீசார் வாகனங்களில் எடுத்துச் சென்றனர். இதனால் விநாயகர் சிலைகளை போலீசார் கைது செய்துவிட்டதாக பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தற்போது இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாக்மங்களா பதற்றம் ஓய்வதற்குள் மண்டியாவின் மாத்தூர் அருகே சோம்பூர் கிராமத்தில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சோம்பூர் கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தி வந்தனர். இந்த விநாயகர் சிலையை கரைக்கவும் தயாராக இருந்தனர் அந்த கிராமத்து இளைஞர்கள். ஆனால் இரவோடு இரவாக மூன்றரை அடி உயர விநாயகர் சிலையை ஒரு கும்பல் திருடிச் சென்றுவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சோம்பூர் கிராம இளைஞர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். காணாமல் போன விநாயகர் சிலையை போலீசார் தேடி வருகின்றனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications