ஒரே ஏரியாவை பலமுறை தாழ்வாக சுற்றி வந்த விமானம்.. பதறிய பெங்களூர்.. என்னாச்சு?
பெங்களூர்: பெங்களூர் பகுதியில் வானில் ஒரு விமானம் 1 மணி நேரத்திற்கும் மேலாக தாழ்வாக ஒரே பாதையில் வட்டமடித்துச் சுற்றி வருவது பெங்களூர் வாசிகளை பதற வைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் தெற்கு பகுதி மக்கள் இன்று இரவு வானில் ஒரு ஆச்சர்யமான விஷயத்தைப் பார்த்தனர். பெங்களூர் தெற்கு பகுதியின் ஜேபி நகர் பகுதியில் இருந்து கார்மேல்ராம் பகுதிக்குச் செல்வதும், மீண்டும் அங்கிருந்து திரும்பி வருவதுமாக ஒரு விமானம் நீண்ட நேரமாக வட்டமடித்தபடி இருந்துள்ளது.

இந்த விமானம் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக தாழ்வாகப் பறந்தாவாறு பெங்களூரை வட்டமடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாழ்வாகப் பறந்ததால் அதிக சத்தமும் எழுந்துள்ளது. இந்த விமானம் ஒரே நீள்வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
ஏன் ஒரு விமானம், ஒரே பாதையில் வட்டம் போட்டவாறு பறக்கிறது என பெங்களூர் வாசிகள் குழம்பினர். திடீரென பெங்களூர் நகருக்கு மேலே வானில் பறந்து வட்டமடிக்கும் விமானம் பற்றி விமான டிராக்கிங் ஆப்களில் தேடியதில் அந்த விமானம் ஏர் ஆகாசா விமானம் என தெரியவந்தது.

வானில் வட்டமடிக்கும் விமானம் பற்றி நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, சந்தேகம் எழுப்பினர். மேலும் பலரும், இன்னும் பெங்களூருக்கு மேலே இந்த விமானம் பறந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். ஃப்ளைட் ட்ராக்கிங் நிறுவனம் ஒன்று, இந்த விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications