குட்டி டவுசர் போட்டுகிட்டு சுத்தக் கூடாது.. நடு ரோட்டில் பெண்ணிடம் எகிறிய பெங்களூர் மூதாட்டி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் இளம்பெண் ஷாட்ஸ் அணிந்திருந்ததை எதிர்த்து பாட்டி ஒருவர் பேசிய வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. பாட்டியின் கருத்துக்கு பலர் எதிர்ப்பும், சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

மனித நாகரிகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போதெல்லாம், அது குறித்து தொடர் விமர்சனங்கள் எழுவது இயல்பானதுதான். உதாரணமாக, ஆடை விஷயத்தை எடுத்துக்கொள்வோம். "அந்த காலத்தில் எப்படியெல்லாம் இருந்தோம் தெரியுமா? இப்போ என்னடான்னா இஷ்டத்துக்கும் டிரஸ் போடுறீங்க" என்று வயதில் மூத்தவர்கள் பலர் கூறுவதை கேட்க முடிகிறது. இதுபோன்ற சம்பவம்தான் தற்போது பெங்களூரில் நடந்திருக்கிறது.

bangalore karnataka

அதாவது பெங்களூரின் பரபரப்பான சாலை ஒன்றில், இன்ஸ்டாகிராம் பிரபலம் டேனி பட்டாச்சார்ஜி நடந்து சென்றிருக்கிறார். அப்போது எதிரே வந்த ஒரு பாட்டி, டேனி பட்டாச்சார்ஜி ஷாட்ஸ் அணிந்து வந்ததற்காக கடுமையாக கோபப்படுகிறார். கன்னடத்தில் அவரை திட்டுகிறார். இதை வீடியோவாக பதிவு செய்த டேனி பட்டாச்சார்ஜி, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருக்கிறார். தற்போது டிரெண்டிங்கில் இந்த வீடியோதான் இருக்கிறது.

வீடியோ குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். பலர் ஆடை குறித்து பாட்டி கூறிய கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். பெண்கள் மிகவும் கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். அதுதான் அவர்களுக்கான மரியாதையை அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர். அதேபோல, வீட்டிற்குள் போடும் ஆடைகளையெல்லாம் ஏன் தெருவில் போட்டுக்கொண்டு வர வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் சிலர் இந்த கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதாவது, ஆடை என்பது அவரவருடைய தனிப்பட்ட விருப்பம். எனவே இது குறித்து யாருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை கிடையாது என்று கூறியுள்ளனர். மேலும், ஆடையை வைத்துதான் ஒருவரை எடை போடுகிறோம் என்று கூறுவதே தவறானது என்றும் கூறுகின்றனர். பெண்களின் ஆடைகளால்தான் அவர்கள் மீது மதிப்பு கூடுகிறது எனில், பெண்களின் சிந்தனைகளை இந்த சமூகம் பார்க்க மறுக்கிறது என அர்த்தம் என்றும் கூறுகின்றனர்.

வேறு சிலர், பாட்டிக்கு எதிர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். பெங்களூரில் ஷாட்ஸ் தடை செய்யப்பட்ட உடையா? என்று கேட்டிருக்கிறார்கள்.

மனிதர்கள்தான் இந்த உலகில் மிகவும் ஜனநாயக பண்பு கொண்ட, உயர்ந்த நாகரிகம் கொண்ட உயிரினம் என்று சொல்லிக்கொள்கிறோம். இந்த உயர்ந்த நாகரிகம் என்பது, ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனையும், அவரவர் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ அனுமதிப்பதுதான். எது சரி எது தவறு என்பதை அவரவரே முடிவு செய்துக்கொள்வதுதான். அந்த வகையில் பெங்களூரில் நடந்த பஞ்சாயத்து குறித்து அவரவரின் சொந்த பார்வையே முடிவு செய்யட்டும் என்றும் ஒரு சிலர் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+