எடியூரப்பா பேர ஆடியோ... சிறப்பு விசாரணை குழுவை அமையுங்க.. குமாரசாமிக்கு சபாநாயகர் ஆலோசனை
Recommended Video

பெங்களூரு:எடியூரப்பாவின் தொலைபேசி உரையாடல் குறித்து சிறப்பு விசாரணை குழுவை அமைக்கலாம் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமியை சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
கர்நாடக முதல்வர் குமாரசாமி, பாஜக மாநில தலைவர் எடியூரப்பா மஜத எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் பேசியதாகக் கூறி அது தொடர்பான 2 ஆடியோ பதிவுகளை வெளியிட்டார். பாஜக மாநில தலைவர்கள், தங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டால் ரூ.50 கோடி கொடுப்பதாக கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் பேரம் பேசியுள்ளனர்.

இது தொடர்பான ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன் என குமாரசாமி தெரிவித்தார். ஆனால் குமாரசாமியின் ஆதாரங்கள் பொய் என்றும் அவை அனைத்தும் திரிக்கப்பட்டவை என்றும் எடியூரப்பா கூறி வந்தார்.
அந்த நிலைப் பாட்டில் இருந்து மாறிய எடியூரப்பா ஒரு கட்டத்தில் தாம் பேசியதை ஒப்புக் கொண்டார்.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அமைக்குமாறு சபாநாயகர் ரமேஷ்குமார், குமாரசாமி அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:இது எனது உத்தரவல்ல. ஒரு ஆலோசனையேயாகும். ஆடியோ டேப்பில் உள்ளது என்ன? உண்மையாக அதில் பேசியவர்கள் யார் என்பதை அறிய வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால், சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாஜகவின் ஜெகதீஷ் ஷெட்டர், கோவிந்த் கர்ஜோல், மதுசாமி ஆகியோர் சபா நாயகரின் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது: சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்பதை எதிர்க்கிறோம். நம்பிக்கையில்லாத இந்த அரசாங்கம் தலைமையில் அமைக்கப்படும் சிறப்பு விசாரணையில் உண்மை வெளிவராது என்று கூறினர்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications