மழைக்காலம்.. சளி, இருமல் இப்போ சாதாரணம்.. கொரோனா டெஸ்ட் தேவையா, இல்லையா? எப்படி கண்டுபிடிப்பது?
பெங்களூர்: மழை மற்றும் குளிர் காரணமாக பொதுமக்களுக்கு ஜலதோஷம் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு பெங்களூர் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அறிவுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
தென்மேற்கு பருவ மழையின் தாக்கத்தால், பெங்களூர் உட்பட கர்நாடக பகுதிகள் பலவற்றிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து, குளிர் நிலவுகிறது. இவை அனைத்தும் சேர்த்து சளி, இருமல் போன்ற பிரச்சினைகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக காற்றில் மாசுபாடு குறைந்து உள்ளதால், கடந்த சில மாதங்களாக மருத்துவமனைக்கு, சளி, இருமலுடன் செல்லும் நோயாளிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து இருந்தது.

பரிசோதனை
ஆனால் கடந்த சில நாட்களாக பெங்களூர் நகரில், இதுபோன்ற நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், நகரில் உள்ள பல மருத்துவமனைகளிலும் சளி, இருமல் என்று பயணிகள் சென்றாலே முதலில் கொரோனா பரிசோதனை எடுத்து அதன் முடிவுகளை காட்டி விடுங்கள் என்று தெரிவிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வேறுபாடு என்ன
இதுபற்றி பன்னேர்கட்டா சாலையில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் இன்டர்ணல் மருத்துவத் துறையின் இயக்குனர் சுதா மேனன் கூறுகையில், அலர்ஜி காரணமாக ஏற்படக்கூடிய ஜலதோஷம் மற்றும் கொரோனா ஜலதோஷம் ஆகியவற்றுக்கு இடையே சில அடிப்படை வேறுபாடுகள் இருக்கின்றன. மழைக்காலத்தில் அலர்ஜி காரணமாக ஜலதோஷம் ஏற்படுவது இயல்புதான். இதனால் மூக்கு ஒழுகுதல், சைனஸ் காரணமாக தலைவலி மற்றும் இருமல் ஏற்படும்.

பரிசோதனை அவசியம்
அலர்ஜி காரணமாக உருவாகக்கூடிய ஜலதோஷம் பிறருக்கு பரவாது. அதே நேரம், ஜல தோஷம் உள்ளவருக்கு தொண்டை வலி, உடல் வலி, தலைவலி மற்றும் லேசான காய்ச்சல் இருந்தால் கூட அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உஷார் மக்களே
தொண்டைவலி என்று வருவோருக்கு மருத்துவர்கள் எளிதாக வைத்தியம் பார்த்து விட முடியாது என்கிறார்கள் மருத்துவமனை வட்டாரத்தில். ஏனெனில், வாயை திறந்து தொண்டையை பரிசோதிக்கும்போது மருத்துவருக்கு நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. கொரோனா நோயாளிகள் என்று தெரியாமல் தொண்டை பரிசோதனை ஈடுபட்ட, பல, காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்களுக்கு நோய்த்தொற்று பரவி உள்ளதைப் பார்க்க முடிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே பொதுமக்கள், ஜலதோஷம் மற்றும் கொரோனா பிரச்சினை இதில் எது தங்களுக்கு தாக்கியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் முன்பாக, வீட்டை விட்டு மருத்துவமனை தவிர்த்து வேறு எங்கும், வெளியே செல்லாமல் தவிர்ப்பது நலன் பயக்கும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications