பெங்களூர் சர்ஜாபுரா சாலையில் மாற்றுப்பாதை.. விப்ரோ ஏற்றால் ஐடி ஊழியர்களுக்கு பெரிய குட் நியூஸ்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள சர்ஜாபுரா வெளிப்புறச் சுற்றுவட்டச் சாலையில் நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, விப்ரோவின் தொழில்நுட்ப வளாகத்தின் வழியாக வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா விப்ரோ நிறுவனத் தலைவர் ரிஷத் பிரேம்ஜியிடம் கோரிக்கை வைத்தார். உண்மையில் இந்த கோரிக்கையை மட்டும் விப்ரோ ஏற்றால், பெங்களூர் ஐடி மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான விஷயம் ஆக இருக்கும்.. கடுமையான நெரிசல் அப்படியே பாதியாக குறைந்துவிடும்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா, விப்ரோ நிறுவன தலைவர் ஆசிம் பிரேம்ஜிக்கு நேற்று கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், கர்நாடகத்தில் ஐடி துறையின் வளர்ச்சி மற்றும் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்து வரும் உங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பெங்களூர் இப்லூர் சந்திப்பில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு வருவது பெரும் சவாலாக இருக்கிறது. இது வாகன போக்குவரத்து, உற்பத்தி மற்றும் மக்களின் தரமான வாழ்க்கை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

30 சதவீதம் நெரிசல் குறையும்
இதன் காரணமாக விப்ரோ நிறுவன வளாகத்திற்குள் வாகன போக்குவரத்தை அனுமதிக்க நான் விரும்புகிறேன். அதேநேரம் இது இருதரப்பு பரஸ்பர ஒப்புதலுக்கு உட்பட்டது. இவ்வாறு அனுமதித்தால் புறவழிச்சாலை (ஓ.ஆர்.ஆர்.) மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் 30 சதவீதம் வரை வாகன நெரிசல் குறையும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் உங்களின் ஒத்துழைப்பு முக்கியமானது.
சித்தராமையா வேண்டுகோள்
வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிக்கப்படுவது தடுக்கப்படும். பெங்களூர் நகரம் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற பகுதியாக மாற்றுவதில் உங்களின் உதவி தேவையாகும். அதனால் உங்கள் நிறுவன அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து முடிந்தவரை விரைவாக பரஸ்பர ஒத்துழைப்பு ஏற்பு திட்டத்தை வகுத்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்" இவ்வாறு சித்தராமையா கூறியிருந்தார்.
சர்ஜாபுரா சாலையில் உள்ள சிக்கல்
முதல்வர் சித்தராமையாவே இந்த விஷயத்தில் கடிதம் எழுதுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. ஏனெனில் பெங்களூருவின் பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள் அமைந்துள்ள சர்ஜாபுரா சாலை, குறுகலாகவும், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதற்குப் போதுமான வசதிகள் கிடையாது. எனவே அங்கு எப்போதுமே நெரிசல் மிக அதிகமாக உள்ளது. அதேபோல் அங்கு மாற்றுப்பாதை இல்லை. இந்தப் பகுதியில் வாகனங்கள் எளிதாகச் செல்ல மாற்றுப் பாதைகள் எதுவுமே இல்லை. இதனால் அனைத்து வாகனங்களும் ஒரே சாலையில் செல்ல வேண்டியிருக்கிறது.
புதிய மாற்றுப்பாதை
அந்த சாலையில் அமைந்துள்ள விப்ரோ வளாகம் மிகவும் பெரியது ஆகும். அதன் வழியாக ஒரு மாற்றுப் பாதையை அமைத்தால், அது சர்ஜாபுரா சாலையின் நெரிசலைக் குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஆகவேதான் விப்ரோ வளாகத்திற்குள் போக்குவரத்தை அனுமதிக்க கோரிக்கை வைத்துள்ளார் முதல்வர் சித்தராமையா.. இந்த கோரிக்கையை ஏற்று புதிய மாற்றுப்பாதை உருவானால் பெங்களூர் ஐடி ஊழியர்களுக்கு, அந்த சாலை மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications