பெங்களூருவில் கள்ளச் சந்தையில் கொரோனா படுக்கைகள் விற்கப்பட்டது எப்படி? ஒரே நாளில் மூன்று பேர் கைது
பெங்களூரு: கொரோனா படுக்கைகளைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக நேற்று மட்டும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் ஏற்கனவே மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன.

இந்நிலையில், பெங்களூருவில் கொரோனா படுக்கைகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக அம்மாநிலத்தின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நேற்று சஷிதர், வெங்கோபா ராவ், மற்றும் சுதிர் உமா ராணி என மூவரை இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவரும் பெங்களூருவில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருபவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
பொதுவாக பெங்களூரு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னரும் உயிரிழந்த பின்னரும் காலியாகும் படுக்கைகள் குறித்த தகவல்கள் வார் ரூமிற்கு அனுப்ப வேண்டும்.
ஆனால், இவர்கள் மூவரும் அந்தத் தரவைகளை அனுப்பவில்லை. மாறாக அத்தகைய படுக்கைகளையே இவர்கள் மற்ற நோயாளிகளுக்குச் சட்டவிரோதமாக விற்றுள்ளனர். இதுவரை இந்த வழக்கில் ஏழு பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.
-
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications