பெங்களூரில் கடும் குளிர்.. 10 டிகிரிக்கு போன வெப்பநிலை.. அடுத்த வாரம் தான் முக்கியமாம் - வார்னிங்
பெங்களூர்: பெங்களூரில் தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் குளிர் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வரும் நிலையில் நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளதோடு, வரும் நாட்களிலும் இந்த குளிர் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா உள்பட இந்தியா முழுவதும் டிசம்பர் மாதத்தில் குளிர் அதிகரிக்கும். குறிப்பாக தமிழ் மாதமான மார்கழியில் கடும் குளிர் நிலவும். நாளை மார்கழி மாதம் பிறக்க உள்ளது. இப்படியான சூழலில் தான் மார்கழிக்கு முன்பாகவே பெங்களூரில் கடும் குளிர் மக்களை வாட்ட தொடங்கி உள்ளது.
கடந்த வாரம் பெங்களூரின் குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 16 டிகிரி செல்சியஸாக இருந்தது. நேற்று முன்தினம் பெங்களூர் நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாக இருந்தது. தற்போது அது இன்னும் கூட குறைந்துள்ளது. இதனால் பெங்களூரில் குளிர் அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் பெங்களூர் தெற்குப்பகுதிகளில் இரவு நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.1 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது. அதேபோல் பெங்களூர் புறநகர் பகுதிகளில் 10.4 டிகிரி செல்சியஸ், பெங்களூர் நகரில் 10.8 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை குறைந்து மக்களை குளிர் வாட்டி வதைக்க தொடங்கி உள்ளது.
பெங்களூரை எடுத்து கொண்டால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக 2016ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாக இருந்தது. தற்போது அதைவிட வெப்பநிலை குறைந்தது. இதனால் இந்த டிசம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு குளிரை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த குளிர் என்பது பெங்களூர் மட்டுமின்றி கர்நாடகாவில் உள்ள பீதர், கலபுரகி, விஜயாப்புரா, யாதகிரி, ராய்ச்சூர், பாகல்கோட்டை, பெலகாவி, தார்வார் உள்ளிட்ட வடகர்நாடகா மாவட்டங்களில் எதிரொலிக்கிறது. அங்குள் நாளுக்கு நாள் குளிர் அதிகரித்து கொண்டே செல்கிறது.
பொதுவாக கடும் பனிப்பொழிவு, வறண்ட வானிலை, தெளிவாக வானம் இருத்தல் உள்ளிட்டவை குளிரை அதிகரிக்கும். இந்த 3 காலநிலையும் பெங்களூரில் நிலவி வருகிறது. இதனால் வரும் நாட்களில் பெங்களூர் நகரின் குளிர் இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் பெங்களூரில் குளிர் இன்னும் அதிகரிக்கும் என்று வார்னிங் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி பெங்களூரில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி சிஎஸ் பாட்டீல் கூறுகையில், ‛‛வறண்ட காற்று, தெளிவான வானம் மற்றும் நிலையான வளிமண்டல சூழல் ஆகியவற்றின் கலவையால் வெப்பநிலை குறைகிறது. இவை அனைத்தும் இரவுநேர வெப்பநிலையை குறைத்து குளிர்ச்சியை அதிகரிக்கிறது.
மேலும் குளிருக்கு வடகிழக்கு காற்று வலுசேர்க்கிறது. இந்த காற்று வடக்கு மற்றும் மத்திய இந்தியாில் உள்ள உயர் அழுத்த மண்டலத்தில் இருந்து குளிர்ச்சியான, வறண்ட காற்றை தெற்கு நோக்கி கொண்டு வருகிறது. இதனால் குளிரும் அதிகரிக்கிறது அதேபோல் அதிகாலை பனிப்பொழிவும் குளிரை கூட்டி உள்ளது'' என்றார்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications