Bengaluru Metro Fare: பெங்களூர் மக்களுக்கு குட்நியூஸ்.. மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!
பெங்களூர்: பெங்களூருவில் ஓடும் மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட் ரூ.1 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டது. இந்த டிக்கெட் கட்டணம் நாளை (பிப்ரவரி 9) முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தான் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டண உயர்வை நிறுத்தி வைப்பதாக பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
சென்னையை போல் பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களின் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள பெங்களூரில் வசிக்கும் மக்களுக்கு பெங்களூர் மெட்ரோ ரயில் சேவை வரப்பிரசாதமாக உள்ளது. இருப்பினும் பெங்களூர் நகர் முழுவதும் மெட்ரோ ரயில் சேவை இல்லை.

தற்போது பெங்களூர் நகரில் மொத்தம் 96.10 கிலோமீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. பெங்களூருவில் மாதவரா முதல் சில்க் போர்ட் வரை பச்சை வழித்தடத்திலும், ஒயிட்பீல்டில் இருந்து சல்லகட்டா வரை ப்ளூ வழித்தடத்திலும், ஆர்.வி.ரோட்டில் இருந்து பொம்மசந்திரா வரை மஞ்சள் வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. மேற்கொண்டு மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
டிக்கெட் கட்டணம் உயர்வு
இந்நிலையில் தான் பெங்களூர் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது. குறைந்தபட்சம் ரூ.1 முதல் அதிகபட்சமாக ரூ.5 வரை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.11 ஆகவும், அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.90ல் இருந்து ரூ.95 ஆகவும் அதிகரித்து இருந்தது.
கடும் எதிர்ப்பு
இந்த கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பொதுமக்களும் எதிர்ப்பை பதிவு செய்தனர். பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையை எடுத்து கொண்டால் இந்தியாவிலேயே அதிக கட்டணம் உள்ள சேவையாகும். இப்படியான சூழலில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் இந்த எதிர்ப்பு கிளம்பியது.
கட்டண உயர்வு நிறுத்தம்
இந்நிலையில் தான் பெங்களூர் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிஎம்ஆர்சிஎல் எனும் பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛ பிப்ரவரி 5ம் தேதி கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. இது பிப்ரவரி 9 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கட்டண உயர்வு அடுத்த அறிவிப்பு வரும்வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
ನಮ್ಮ ಮೆಟ್ರೋ ಟಿಕೆಟ್ ದರ ಹೆಚ್ಚಳವನ್ನು ತಾತ್ಕಾಲಿಕವಾಗಿ ಸ್ಥಗಿತಗೊಳಿಸಲಾಗಿದೆ. ಹೆಚ್ಚಿನ ಮಾಹಿತಿಗಾಗಿ ಮಾಧ್ಯಮ ಪ್ರಕಟಣೆಯನ್ನು ಪರಿಶೀಲಿಸಿ.
— ನಮ್ಮ ಮೆಟ್ರೋ (@OfficialBMRCL) February 8, 2026
Namma Metro fare hike kept on hold. For more details pl check the Media Release pic.twitter.com/NQ330tmy2I
திருத்தப்பட்ட கட்டணம் குறித்த அறிவிப்பு வாரிய குழுவின் மறுபரிசீலனைக்கு பிறகு அறிவிக்கப்படும். பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் பொதுமக்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் மலிவு விலையில் மெட்ரோ ரயில் சேவைகளை வழங்குவதில் உறுதியாக உள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
எவ்வளவு கட்டணம் உயர்ந்தது?
முன்னதாக மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதற்கு Fare Fiation Committee (FFC) செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 10 அடுக்குகளாக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது.
அதன்படி 0-2 கிலோமீட்டர் தொலைவுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.11 ஆகவும், 2 முதல் 4 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.21 ஆகவும், 4 முதல் 6 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ30ல் இருந்து ரூ.31 ஆக அதிகரிக்கப்பட்டது.
பிறகு 6 முதல் 8 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ.40ல் இருந்து ரூ.42 ஆகவும், 8 முதல் 10 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.53 ஆகவும், 10 முதல் 15 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ.60 ல் இருந்து ரூ.63 ஆகவும், 15 முதல் 20 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ.70ல் இருந்து ரூ.74 ஆகவும் உயர்த்தப்பட்டு இருந்தது.
20 முதல் 25 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணம் ரூ.80ல் இருந்து ரூ.84 ஆகவும், 25 கிலோமீட்டர் தொலைவுக்கும் மேலான பயணத்துக்கான கட்டணம் ரூ.90 ல் இருந்து ரூ.95 ஆக உயர்த்தப்பட்டு இருந்தது. தற்போது இந்த கட்டண உயர்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications