கர்நாடகாவில் விவசாயிகள் ஆவேச போராட்டம்.. பெங்களூரிலும், நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
பெங்களூர்: மத்திய அரசு நிறைவேற்றிய விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நடைபெறும் பாரத் பந்த் தர்ணாவின் ஒரு பகுதியாக, பெங்களூர் உட்பட, கர்நாடகா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
பெங்களூரின் மையப்பகுதியான மெஜஸ்டிக்கை அடுத்து உள்ள, மைசூர் வங்கி சதுக்கத்தில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் பச்சை துண்டுகளுடன் ஒன்றுகூடி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

"ஏபிஎம்சி மார்க்கெட் சட்ட திருத்தம் ஒழிக.." என்று அவர்கள் கோஷம் எழுப்பியதை பார்க்க முடிந்தது. இந்த போராட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மட்டுமல்லாது கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். ஆம் ஆத்மி கட்சியினரும் திரளாக பங்கேற்றனர். இவ்வாறு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரில் இருந்து மைசூர் செல்லக்கூடிய நெடுஞ்சாலை, தும்கூர் நெடுஞ்சாலை உள்ளிட்டவற்றில் கரும்பு விவசாயிகள் நூற்றுக்கணக்கில் குவிந்து போக்குவரத்தை தடை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 35 விவசாய சங்க பிரதிநிதிகள் கர்நாடகாவில் இன்றைய போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர். பெங்களூரை சுற்றி உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மட்டுமல்லாது பெங்களூர் நகருக்குள்ளும் ஆங்காங்கு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் விவசாயிகள்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளதால் போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களை வேறு பாதைகளில் திருப்பி அனுப்புவதில் தீவிரம் காட்டி வருவதைப் பார்க்க முடிந்தது.
நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மிக குறைவான அளவுக்கான வேகத்தில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications