கடும் விமர்சனம் எழுந்ததால்.. பா.ஜ.க எம்.பி. தேஜஸ்வி சூர்யாவின் கட்டண தடுப்பூசி முகாம் ரத்து!
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவின் தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது கட்டண தடுப்பூசி முறையாகும்.
கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியையும் முறையாக செயல்படுத்த முடியவில்லை..

இந்த நிலையில் பெங்களுருவில் சிறு தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மனைகளுடன் இணைந்து கட்டண முறையில் தடுப்பூசி போட பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா திட்டமிட்டார். ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகா தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நேரத்தில் தேஜஸ்வி சூர்யா இந்த வழியில் எவ்வாறு தடுப்பூசி போட முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறையை உருவாக்கி, தனியார் நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதாக கர்நாடக அரசு மீது பலரும் குற்றம்சாட்டினார்கள். இது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது சமூக ஊடகங்களில் பொங்கியெழுந்தனர். கடும் விம்சர்சனம் காரணமாக பெங்களுரு ஷாலினி மைதானத்தில் நடைபெற இருந்த தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டுவிட்டரில் தெரிவித்துள்ள தேஜஸ்வி சூர்யா, தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாகவும் மருத்துவமனையில் பதிவு விரைவில் தொடங்கும் என்றும் கூறியுள்ளார். பெங்களூரில் உள்ள பல தனியார் மருத்துவமனைகள் இத்தகையதடுப்பூசி திட்டங்களை நடத்தி வருவதாக அவரது அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications