மொத்த நகரத்தையே ஐஸ் கட்டிக்குள் வைத்த மாதிரி வானிலை.. சுவிஸ் போல மாறிய பெங்களூர்! ப்பா என்ன குளிர்
பெங்களூரில் கடந்த 2 நாட்களாக வெப்பநிலை குறைந்து மிகவும் குளிரான வானிலை நிலவி வருகிறது.
பெங்களூர்: பெங்களூரில் கடந்த 2 நாட்களாக வெப்பநிலை குறைந்து மிகவும் குளிரான வானிலை நிலவி வருகிறது. 2019 வருட தொடக்கமே பெங்களூரில் மிக மிக குளிராக தொடங்கி உள்ளதால் மக்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
பெங்களூர் எப்போதும் மிகவும் குளிரான நகரம் ஆகும். மே மாதத்தில் கூட பெங்களுரில் குளிர் அடிக்கும், கோடை காலத்தில் கூட அங்கு மழை பெய்யும்.
எப்போதும் ஜில் ஜில், கூல் கூல் என்று இருக்கும் பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக மிக அதிக அளவில் குளிர் நிலவுகிறது. வெப்பநிலை திடீர் என்று குறைந்து இருக்கிறது. ஊர் மொத்தத்திற்கும் சேர்த்து வானத்தில் ஏசி போட்டது போல இருக்கிறது.

புத்தாண்டு எப்படி தொடங்கியது
பெங்களூரில் புத்தாண்டே மிகவும் குளிராகத்தான் தொடங்கியது. எப்போது பெங்களூரில் அதிகாலையில் 18-19 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவுவது வழக்கம். இது மிகவும் குளிரான வானிலை என்றாலும் கூட, பெங்களூர் மக்கள் இதற்கு பழக்கப்பட்டவர்கள்தான். ஆனால் திடீர் என்று நேற்று அதிகாலை 13-14 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. இதனால் குளிர் மக்களை வாட்டி எடுத்தது.

இரவு இன்னும் குறைந்தது
அதன்பின் நேற்று இரவு வெப்பநிலை மேலும் குறைந்தது. நேற்று இரவு 11 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை குறைந்தது. சாலைகள் முழுக்க பனி மூட்டமாக காணப்பட்டது. மக்கள் பலர் வேகமாக வீடு திரும்பியதால் பெரிய டிராபிக் நெரிசல் ஏற்பட்டது.

இன்னும் மோசமானது
இந்த நிலையில் இன்று அதிகாலை வெப்பநிலை இன்னும் மோசமானது. இன்று அதிகாலை 10 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை குறைந்தது. குளிரில் கைகள் உறையும் அளவிற்கு சென்றது. காலை பத்து மணி வரை 14 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது.

ஒரு பக்கம் கொண்டாட்டம்
இந்த குளிரால் மக்கள் அவதிப்பட்டாலும் ஒரு பக்கம் மக்கள் இதை சந்தோசமாக கொண்டாடிக் கொண்டுதான் இருந்தனர். பெங்களூர் இப்போதுதான் உண்மையான பெங்களூர் போல இருக்கிறது என்று சந்தோசப்பட்டனர். பெங்களூருக்கு அருகே இருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஓசூரில் 11 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை குறைந்தது.

இன்னும் 5 நாட்கள்
பெங்களூர் மட்டுமில்லாமல் சென்னை உள்ளிட்ட வட தமிழகங்களிலும் இதேபோல குளிரான சீதோஷணம் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் ஐந்து நாட்களுக்கு இப்படித்தான் குளிரான சூழ்நிலை நிலவும் என்று கூறுகிறார்கள். இதனால் மக்கள் குளிருக்கு ஏற்ற ஆடைகளை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications