என்ன பண்றது... கூட்டாட்சி தத்துவம் நம்ம கையை கட்டிப் போட்டிருக்கு.. குமாரசாமி புலம்பல்!
Recommended Video
பெங்களூர்: தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படுமா என்ற கேள்விக்கு கர்நாடக விவசாயிகள் மத்தியில் முதல்வர் குமாரசாமி விரக்கியுடன் பேசியுள்ளார்.
மாண்டியா மாவட்டம், கே ஆர் பேட்டை தாலுக்காவில் உள்ள அகல்யா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் (45) தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் தனது இறுதிச் சங்கில் முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என வீடியோ மூலம் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து சுரேஷின் வீட்டுக்கு சென்ற குமாரசாமி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

முழுமையாக
அப்போது அவர் கூறுகையில் மழை இல்லாததால் விவசாயிகள் தண்ணீர் இல்லை என கூறுகிறார்கள். மழை காலத்தில் ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். என்னதான் நாம் தண்ணீரை சேமித்து வைத்தாலும் நம் மாநில மக்கள் அதை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது நம் மாநிலத்தின் துரதிருஷ்டம்.

நீதிமன்றங்கள்
கூட்டாட்சி தத்துவத்தை நாம் பின்பற்றுவதால் இதுபோல் நம்மால் முழு தண்ணீரையும் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. காவிரி ஆணையம், நடுவர் மன்றம், நீதிமன்றங்களுக்கு நாம் கட்டுப்பட வேண்டிய நிலை உள்ளது.

விநியோகிப்பது
குறிப்பிட்ட அளவு தண்ணீரை நாம் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். காவிரி ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு மத்தியிலிருந்து தமிழகத்திலிருந்தும் பிரதிநிதிகள் உள்ளனர். தண்ணீரை எப்படி விநியோகிப்பது என்பது குறித்து அவர்கள் இன்று முடிவு செய்வர்.

முயற்சித்து
அதை தீர்மானிக்க வேண்டிய நிலையில் நாம் இல்லை. காவிரி மட்டுமில்லை, கிருஷ்ணா, மகாதாயி ஆகிய ஆற்று நீரையும் நாம் முழுவதுமாக பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளோம். இதற்கெல்லாம் நான் மட்டுமே பொறுப்பல்ல. எனினும் இதை சரி செய்ய முயற்சித்து வருகிறோம் என்றார் குமாரசாமி.

திறந்துவிடும்
கர்நாடக முதல்வர் குமாரசாமியின் இந்த விரக்தி பதிலின் மூலம் தமிழகத்திற்கு குறுவை சாகுபடிக்காக கர்நாடகம் காவிரி நீரை திறந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications