தொங்கு சட்டசபை எல்லாம் நோ சான்ஸ்! கர்நாடகாவில் அடித்து நொறுக்கிய காங்கிரஸ்.. கணிப்புகள் பொய்யானது
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. முதற்கட்ட முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது அங்கே தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புகள் கூறப்பட்ட நிலையில், அதை முறியடித்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் சூழலே இப்போது உருவாகியுள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் புதன்கிழமை சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் இருக்கும் 224 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாகவே நிறைவடைந்தது.

அதைத் தொடர்ந்து இன்று அங்கே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அங்கே ஒரு கட்சி பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இது தவிர பல இடங்களில் ஜேடிஎஸ் கட்சியும் அங்கே பல தொகுதிகளில் கடும் போட்டி தருகிறது. இதனால் சில தொகுதிகளில் அங்கே மும்முனை போட்டி நிலவுகிறது.
முதற்கட்ட முடிவுகளைப் பார்த்துப் பார்க்கும் போது, காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தென் இந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்பதால் கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக கடுமையாக முயல்கிறது. இதன் காரணமாகவே இறுதிக் கட்டத்தில் பிரதமர் மோடியே பல முறை கர்நாடகாவுக்கு நேரடியாக வந்து பிரசாரம் செய்தார்.
மறுபுறம் பாஜக அரசு மக்கள் மீது அதிருப்தி உள்ளனர் என்றும் 40% கமிஷன், மதவாதம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் நம்பிக்கையில் இருந்தது.
கருத்துக்கணிப்புகளிலும் கூட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் வெல்லும் எனக் கூறப்பட்டிருந்தாலும், எக்ஸிட் போல் முடிவுகள் கடும் போட்டி இருக்கும் என்றே கூறியிருந்தது. இன்று வெளியாகும் தேர்தல் முடிவுகளிலும் இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி இருப்பதே தெரிகிறது. கடைசிக் கட்டத்தில் பாஜக தனது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
இதன் மூலம் அங்கே தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்பட்டது. ஏனென்றால் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை என்பது ஒன்றும் புதிய விஷயம் இல்லை கடந்த காலங்களிலும் அடிக்கடி அங்கே தொங்கு சட்டசபை ஏற்பட்டு உள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் கர்நாடக மாநிலத்தில் 1999, 2004, 2008, 2013 மற்றும் 2018 என மொத்தம் ஐந்து முறை தேர்தல்கள் நடந்துள்ளன. அதில் 1999 மற்றும் 2013 என இரு தேர்தல்கள் மட்டுமே ஒரு கட்சிக்குத் தெளிவாகப் பெரும்பான்மை கிடைத்திருந்தது. மற்ற நேரங்களில் தொங்கு இருந்து, மற்ற கட்சிகள் அல்லது சுயேச்சை உடனேயே அரசு அமைந்தன.
இந்தத் தேர்தலிலும் முதற்கட்ட தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, அங்கே தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புகள் இருப்பதே தெரிந்தது. இருப்பினும், வாக்கு எண்ணிக்கை சில மணி நேரம் செல்ல காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையை பெறுவது உறுதியாகியுள்ளது. அங்கே பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், இப்போது காங்கிரஸ் சுமார் 130 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.
இதன் மூலம் காங்கிரஸ் யாருடைய தயவும் இல்லாமல் ஆட்சியை அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications