Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொங்கு சட்டசபை எல்லாம் நோ சான்ஸ்! கர்நாடகாவில் அடித்து நொறுக்கிய காங்கிரஸ்.. கணிப்புகள் பொய்யானது

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. முதற்கட்ட முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது அங்கே தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புகள் கூறப்பட்ட நிலையில், அதை முறியடித்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் சூழலே இப்போது உருவாகியுள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் புதன்கிழமை சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் இருக்கும் 224 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாகவே நிறைவடைந்தது.

Is Karnataka is leading towards Another Hung assembly

அதைத் தொடர்ந்து இன்று அங்கே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அங்கே ஒரு கட்சி பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இது தவிர பல இடங்களில் ஜேடிஎஸ் கட்சியும் அங்கே பல தொகுதிகளில் கடும் போட்டி தருகிறது. இதனால் சில தொகுதிகளில் அங்கே மும்முனை போட்டி நிலவுகிறது.

முதற்கட்ட முடிவுகளைப் பார்த்துப் பார்க்கும் போது, காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தென் இந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்பதால் கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக கடுமையாக முயல்கிறது. இதன் காரணமாகவே இறுதிக் கட்டத்தில் பிரதமர் மோடியே பல முறை கர்நாடகாவுக்கு நேரடியாக வந்து பிரசாரம் செய்தார்.

மறுபுறம் பாஜக அரசு மக்கள் மீது அதிருப்தி உள்ளனர் என்றும் 40% கமிஷன், மதவாதம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் நம்பிக்கையில் இருந்தது.

கருத்துக்கணிப்புகளிலும் கூட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் வெல்லும் எனக் கூறப்பட்டிருந்தாலும், எக்ஸிட் போல் முடிவுகள் கடும் போட்டி இருக்கும் என்றே கூறியிருந்தது. இன்று வெளியாகும் தேர்தல் முடிவுகளிலும் இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி இருப்பதே தெரிகிறது. கடைசிக் கட்டத்தில் பாஜக தனது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இதன் மூலம் அங்கே தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்பட்டது. ஏனென்றால் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை என்பது ஒன்றும் புதிய விஷயம் இல்லை கடந்த காலங்களிலும் அடிக்கடி அங்கே தொங்கு சட்டசபை ஏற்பட்டு உள்ளது.

Is Karnataka is leading towards Another Hung assembly

கடந்த 25 ஆண்டுகளில் கர்நாடக மாநிலத்தில் 1999, 2004, 2008, 2013 மற்றும் 2018 என மொத்தம் ஐந்து முறை தேர்தல்கள் நடந்துள்ளன. அதில் 1999 மற்றும் 2013 என இரு தேர்தல்கள் மட்டுமே ஒரு கட்சிக்குத் தெளிவாகப் பெரும்பான்மை கிடைத்திருந்தது. மற்ற நேரங்களில் தொங்கு இருந்து, மற்ற கட்சிகள் அல்லது சுயேச்சை உடனேயே அரசு அமைந்தன.

இந்தத் தேர்தலிலும் முதற்கட்ட தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, அங்கே தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புகள் இருப்பதே தெரிந்தது. இருப்பினும், வாக்கு எண்ணிக்கை சில மணி நேரம் செல்ல காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையை பெறுவது உறுதியாகியுள்ளது. அங்கே பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், இப்போது காங்கிரஸ் சுமார் 130 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

இதன் மூலம் காங்கிரஸ் யாருடைய தயவும் இல்லாமல் ஆட்சியை அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+