கர்நாடகாவில் அதிர்ச்சி.. சாதியை காரணம்காட்டி ஊருக்குள் நுழைய தலித் எம்பிக்கு அனுமதி மறுப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் பட்டியலினத்தைச் சேர்ந்த எம்பி நாராயணசாமியை சாதியை காரணம் காட்டி ஊருக்குள் அனுமதிக்காத அவலம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் சித்தர துர்கா லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நாராயணசாமி. இவர் தனது தொகுதிக்குள் இருக்கும் பாவாகடா கிராமத்திற்கு மருத்துவர்கள் மற்றும் மருந்தக நிறுவன அதிகாரிகளுடன் நேற்று போயிருக்கிறார்.

அப்போது அந்த கிராமத்தில் வசிக்கும் குறிப்பிட்ட சமுதாய மக்கள், நாராயணசாமி எம்பியை எங்கள் கிராமத்திற்கு அனுமதிக்க முடியாது என்று தடுத்து நிறுத்தியுள்ளனர். பட்டியலின சாதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி என்றும் அவரை ஊருக்குள் அனுமதிக்க முடியாது என கிராம மக்கள் எதிர்த்துள்ளனர்.
அப்போது எம்பி நாராயணசாமிக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து எம்பி நாராயணசாமி அங்கிருந்து ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றார். இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட விரிவான எஸ்பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். எம்பியை கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக கேள்விப்பட்டு கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயன் அதிர்ச்சி அடைந்ததுடன், கிராமத்திற்குள் நுழைவதற்கு எம்பிக்கே அனுமதி இல்லை என்றால் அது மிகவும் கண்டனத்திற்கு உரிய செயல் என்றார். இந்த விஷயத்தில் உறுதியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாம் அனைவரும் சமம் என்றும் நமக்கு நடுவில் எந்தவித பாகுபாடும் இல்லை என்றும் துணை முதல்வர் அஸ்வத் நாராயன் தெரிவித்தார்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications