வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட தாமதமே தோல்விக்கு காரணம்.. கர்நாடக காங்., அமைச்சர்
பெங்களூரு: கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தாமதமாக முடிவு செய்ததும், காங்கிரஸ் கட்சி தோல்வியடைய காரணமாக இருந்திருக்கலாம் என அம்மாநில அமைச்சர் தேஷ்பாண்டே கூறியுள்ளது கட்சியினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பாரதிய ஜனதா மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் கடந்த முறை போலவே இம்முறையும் எதிர்கட்சி அந்தஸ்து காங்கிரஸ் கட்சிக்கு எட்டா கனியாகி விடும் போல சூழல் உள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடகத்தில் ஆளும் மதஜ - காங்கிரஸ் கூட்டணி மக்களவை தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், 25 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த படுதோல்வி குறித்து அம்மாநில அமைச்சர்களில் ஒருவரான தேஷ்பாண்டே கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 50 ஆண்டுகளாக நான் காங்கிரஸ் கட்சியில் உள்ளேன்.
இந்நிலையில் தற்போது கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை கண்டு வருந்துவதாக கூறினார். மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி தலைமை முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும். வேட்பாளர்கள் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் காலதாமதத்தால் கூட தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்திருக்கலாம் என்றார்.
மேலும் வடக்கு கர்நாடக மாவட்டங்களில் மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு மக்கள் செல்வாக்கு சொல்லும்படி இல்லை. எனவே அவர்களுக்கு அத்தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டாம் என கூறப்பட்டது.
ஆனால் அதையும் மீறி அக்கட்சி வேட்பாளர்களுக்கு வட கர்நாடக தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என குறிப்பிட்டார். மக்களவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தோல்வி அடைந்துள்ளது வருத்தம் அளிக்கிறது
மக்களவை தேர்தல் முடிவுகளால் கர்நாடக மாநில கூட்டணி ஆட்சியில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து தேசிய அளவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார். மேலும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த தேஷ்பாண்டே,வேலைவாய்ப்பின்மை, நீர் பிரச்சனை விவசாய பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications