Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக கூட்டணியை எதிர்த்ததால்.. ஜேடிஎஸ் தலைவர் இப்ராஹிம் பதவி நீக்கம்.. அடுத்த தலைவராகும் குமாரசாமி?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன், ஜேடிஎஸ் கட்சி கூட்டணி அமைத்தது. இதனை ஜேடிஎஸ் கட்சியின் மாநில தலைவர் சிஎம் இப்ராஹிம் கடுமையாக எதிர்த்து போர்க்கொடி தூக்கிய நிலையில் அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்குவதாக தேவேகவுடா அறிவித்துள்ளது. மேலும் அடுத்த தலைவராக தேவேகவுடாவின் மகன் குமாரசாமி நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..

முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஜேடிஎஸ் எனும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை நடத்தி வருகிறது. இவர் தற்போது கட்சியின் தேசிய தலைவராகவும், ராஜ்யசபா எம்பியாகவும் உள்ளார். இவரது இளைய மகன் குமாரசாமி கர்நாடகா முதல்வராக பொறுப்பு வகித்துள்ளார்.

Devegowda removes CM Ibrahim from the post of JDS state president because he opposed the BJP alliance

மேலும் குமாரசாமி நீண்டகாலமாக ஜேடிஎஸ் கட்சியின் தலைவராக இருந்தார். இதற்கிடையே தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜேடிஎஸ் கட்சியில் சிஎம் இப்ராஹிம் இணைந்தார். ஜேடிஎஸ்சை பொறுத்தமட்டில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி என தன்னை காட்டி கொள்கிறது.

இந்நிலையில் தான் குமாரசாமியின் உடல்நல பிரச்சனை மற்றும் இஸ்லாமியர் ஒருவரை மாநில தலைவராக நியமித்தால் அது கட்சிக்கு வலு சேர்க்கும் என அவர்கள் நினைத்தனர். இதையடுத்து சிஎம் இப்ராஹிமை மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இத்தகைய சூழலில் தான் ஜேடிஎஸ் கட்சியால் நடந்து முடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் எந்த சாதனையையும் செய்ய முடியவில்லை.

இன்னும் சொல்லப்போனால் ஜேடிஎஸ் கட்சி செல்வாக்காக உள்ள பழைய மைசூர் மாவட்டங்களில் பெரும் சரிவை சந்தித்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இத்தகைய சூழலில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளது. குமாரசாமி கடந்த செப்டம்பர் 22ம் தேதி டெல்லலியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அதன்பிறகு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை தேவேகவுடாவும் உறுதி செய்தார்.

இதற்கிடையே தான் பாஜக கூட்டணியில் இணைந்ததை ஜேடிஎஸ் மாநில தலைவரான சிஎம் இப்ராஹிம் விரும்பவில்லை. இதற்கிடையே ஜேடிஎஸ் கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் அதில் இருந்து விலக தொடங்கி உள்ளனர். மேலும் சிஎம் இப்ராஹிம், பாஜகவுடனான கூட்டணியை கடுமையாக எதிர்த்து வருகிறார். அதோடு ‛‛பாஜக கூட்டணியை நிராகரிக்கிறோம். எனது தலைமையிலான கர்நாடகா மாநில ஜேடிஎஸ் கட்சி இதனை ஒருபோதும் ஏற்காது'' என பகிரங்கமாக அறிவித்தார்.

இது தற்போது ஜேடிஎஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற ஜேடிஎஸ்சின் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோருக்கு விருப்பம் இல்லை. இந்நிலையில் தான் சிஎம் இப்ராஹிம் விரைவில் ஜேடிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் பரவின. இதற்கிடையே தான் இன்று சிஎம் இப்ராஹிம் ஜேடிஎஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தேவேகவுடா இன்று வெளியிட்டார்.

ஜேடிஎஸ் கட்சியின் மாநில தலைவரான சிஎம் இப்ராஹிம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் ஜேடிஎஸ் கட்சியின் அடுத்த கர்நாடக மாநில தலைவராக மீண்டும் குமாரசாமியே செயல்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+