விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே!
பெங்களூர்: தமிழக முதல்வர் விஜய் இன்று கர்நாடகாவின் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மங்களூர் விமான நிலையத்தில் விஜய்யை, கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் யுடி காதர் வரவேற்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வரும் நிலையில் கர்நாடகா அமைச்சர் யுடி காதர், விஜய்யை அவமதித்ததாக சர்ச்சை கிளம்பி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவி, ஒரு ராஜ்யசபா சீட்டை வழங்கியிருந்த விஜய்க்கே இந்த நிலையா? என தவெகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
தமிழக முதல்வர் விஜய் 3 நாள் டெல்லி சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இன்று கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இந்த கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வந்த வரலாறுகள் உள்ளன. குறிப்பாக எம்ஜிஆர், கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு தங்கவாள் ஒன்றை பரிசளித்துள்ளார். இவர்களின் வரிசையில் தான் விஜய் இன்று கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
பொதுவாக அரசியல்வாதிகளிடம் கொல்லூர் மூகாம்பிகை கோவில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த கோவிலில் தரிசனம் செய்து வாள் காணிக்கை, சண்டி யாகம் நடத்தினால் எதிரிகளை வீழ்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் பல அரசியல் தலைவர்கள் தங்களின் ஆஸ்தான ஜோதிடர்களிடம் கேட்டு இந்த கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கமாகும். இதற்கிடையே தான் இன்று விஜய் கோவிலில் தரிசனம் செய்து 1 கிலோ 600 கிராம் எடை கொண்ட 2 அடி நீள வெள்ளி வாள் ஒன்றை காணிக்கையாக வழங்கி உள்ளார்.
முன்னதாக விஜய் டெல்லியில் இருந்து விமானத்தில் கர்நாடகாவின் தட்சின கன்னடா மாவட்டம் மங்களூரில் உள்ள விமான நிலையத்துக்கு வந்தார். மங்களூர் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவும், கர்நாடகாவின் சுகாதார துறை அமைச்சருமான யுடி காதர், விஜய்யை வரவேற்றார். விஜய் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது யுடி காதர் அவருக்கு கைக்கொடுத்து வரவேற்றார். ஆனால் பூங்கொத்து, ரோஸ், புத்தகம் என்று எதையும் கொடுக்கவில்லை. அவர் அருகே நின்றவர்கள் தான் விவேகானந்தர் புத்தகம் உள்பட சில புத்தகம் மற்றும் பூங்கொத்துகளை கொடுத்து விஜய்யை வரவேற்றனர்.
அதன்பிறகு யுடி காதர் அளித்த பேட்டியில், ''கர்நாடகா அரசு, கர்நாடகா மக்கள், என்னுடைய கடலோர மாவட்ட (தட்சண கன்னடா, உடுப்பி) மக்கள் சார்பில் தமிழ்நாடு முதல்வரான மரியாதைக்குரிய விஜய குமாரை வரவேற்றேன். அவரை வரவேற்கிறேன். அவர் விருப்பமான நபராக உள்ளார். ப்ரண்ட்லியாக இருக்கிறார். கடலோர கர்நாடகா மக்கள் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்'' என்றார். இந்த பேட்டியில் யுடி காதர், முதல்வர் விஜய்யை விஜய் எனறோ அல்லது ஜோசப் விஜய் என்றோ கூறியிருக்கலாம். ஆனால் அவர் விஜய குமார் என்று தவறாக கூறியுள்ளார்.
பூங்கொத்து கொடுத்து வரவேற்காதது மற்றும் பெயரை தவறாக கூறியது என 2 சம்பவங்களால் யுடி காதர், விஜய்யை அவமானப்படுத்தினாரோ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுவாக ஒரு மாநிலத்தின் முதல்வர் இன்னொரு மாநிலத்தில் நடக்கும் தனியார் நிகழ்ச்சி அல்லது கோவிலுக்கு சென்றால் அரசு சார்பில் வரவேற்பு அளிக்க வேண்டிய தேவையில்லை.
அதேவேளையில் அவருக்கான பாதுகாப்பு மற்றும் மரியாதையை பிற மாநிலங்கள் வழங்கும். ஒரே கட்சிகள் இருமாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலோ அல்லது கூட்டணி கட்சியினர் ஆட்சியில் இருந்தோலோ வரவேற்பு சிறப்பாக இருக்கும். ஆனால் விஜய்யுடன் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் கூட அவரை வரவேற்கும்போது கர்நாடகா அமைச்சர் பூங்கொத்து கூட வழங்கவில்லை. இது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் வரை திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், அதன்பிறகு விலகி விஜய்யின் தவெகவுடன் கைகோர்த்தது. 5 எம்எல்ஏக்கள் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகளை விஜய் வழங்கி உள்ளார். அதோடு ராஜ்யசபா எம்பி பதவியையும் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்திக்காக விஜய்யின் தவெக வழங்கி உள்ளது. இப்படி காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்புகளை வாரி வழங்கிய விஜய்க்கு, கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் பூங்கொத்து கொடுக்கலையே என்று தமிழககத்தை சேர்ந்த தவெகவினர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி டெல்லியில் 3 நாள் இருந்த விஜய் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து பேசி உள்ளார். அதன்பிறகு தான் விஜய், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிற்கு சென்றுள்ளார். இதனால் விஜய்யை பூங்கொத்து கொடுத்து காங்கிரஸ் அமைச்சர் யுடி காதர் வரவேற்பு தெரிவித்து இருக்கலாம் என்று தவெகவினர் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகாவை சேர்ந்த யுடி காதர் தனது தந்தை யுடி ஃபரீத் மரணத்தை தொடர்ந்து 2007 இடைத்தேர்தலில் உல்லால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏவானார். அதன்பிறகு தொகுதி மறுவரையறையில் உல்லால் என்பது மங்களூருவாக மாற்றப்பட்டது.
இதையடுத்து 2008, 2012, 2018, 2023 என 4 சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2013ல் சித்தராமையா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். 2023ல் மீண்டும் காங்கிரஸ் வென்றபோது சபாநாயகரானார். சித்தராமையா ராஜினாமாவை தொடர்ந்து டிகே சிவக்குமார் முதல்வரான நிலையில் தற்போது யுடி காதர் மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக!












Click it and Unblock the Notifications