Boy friend-யை கழற்றிவிடு.. மாணவியை வீட்டுக்கு அழைத்து சென்று பேராசிரியர் செய்த செயல்.. அடச்சீ
பெங்களூர்: பெங்களூரில் தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் 20 வயது மாணவியை தனது வீட்டுக்கு ‛லஞ்ச்' விருந்துக்கு என்று ஏமாற்றி அழைத்து சென்றார். அப்போது அந்த மாணவியிடம் ‛பாய் ஃப்ரண்ட்டை' கழற்றிவிட்டுவிட்டு தனது வீட்டு அருகே உள்ள பிஜியில் தங்கும்படி வலியுறுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரில் பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர். சஞ்சீவ் குமார் மண்டல். இவருக்கு வயது 45. பெங்களூர் ஜெயநகரில் வசித்து வருகிறார். இவர் பணி செய்யும் பல்கலைக்கழகத்தில் 20 வயது நிரம்பிய மாணவி ஒருவர் பிசிஏ படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் தான் சஞ்சீவ் குமார், அந்த மாணவியை தனது வீட்டுக்கு வந்து மதிய உணவு சாப்பிடும்படி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவர் மாணவியின் தாயிடம் பேசி வீட்டுக்கு அழைத்து சென்றார்.
இந்த சம்பவம் கடந்த மாதம் 25ம் தேதி நடந்தது. பேராசிரியர் என்பதாலும், தாய் அனுமதி கொடுத்ததாலும் மாணவியை அவரது வீட்டுக்கு சென்றார். சஞ்சீவ் குமார் வீட்டில் அவரது மனைவி, குழந்தைகள் இருப்பார்கள் என்று மாணவி சென்றார். ஆனால் வீட்டில் அவர்கள் இல்லை. அவர் வசித்து வரும் அப்பார்ட்மென்ட் பார்க்கில் பைக்கை நிறுத்தியபோது தான் வீட்டில் யாரும் இல்லை என்பதை அவர் கூறினார். இதனால் மாணவி தயங்கி உள்ளார்.
இருப்பினும் பயப்பட வேண்டாம். பாதுகாப்பாக இருப்பாய் என்று நம்பிக்கை கொடுத்து மாணவியை வீட்டுக்குள் அழைத்து சென்றார் சஞ்சீவ் குமார். அதன்பிறகு சோபாவில் அமர வைத்து மாணவி குறித்த தனிப்பட்ட விஷயங்களை கேட்டுள்ளார். மேலும் ‛பாய் பிரண்ட்' பற்றிய கேள்விகளை எழுப்பிய அவர் அவருடன் ‛பிரேக்அப்' செய்யும்படி வலியுறுத்தி உள்ளார். அதோடு தனது வீட்டு அருகே உள்ள பிஜியில் தங்க வேண்டும். அப்படி தங்கினால் அடிக்கடி என் வீட்டுக்கு வந்து சந்தேகங்களை கேட்க முடியும் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி பணம், மதிப்பெண் மற்றும் வருகை பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு உதவுவதாக கூறினார். அதன்பிறகு தொடக்கூடாத இடங்களைதொட்டுள்ளார். இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சமயத்தில் மாணவியின் செல்போன் ஒலித்தது. அப்போது செல்போனை எடுக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் மாணவி கேட்காமல் அவரது வீட்டில் இருப்பதாக கூறினார். அதன்பிறகு மாணவி அங்கிருந்து வெளியேறி உள்ளார்.
இதுபற்றி மாணவி சார்பில் திலக் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் பேராசிரியர் சஞ்சீவ் குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். பிஎன்எஸ் சட்டப்பிரிவு 75 (பாலியல் தொல்லை) என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு, ஸ்டேஷன் பெயிலில் விடுவித்தனர். இதுபற்றி, பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‛‛இதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. மாணவி சார்பில் புகார் அளிக்கப்படவில்லை. போலீசார் நடவடிக்கையை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்போம்'' என்றார்.












Click it and Unblock the Notifications