'3,000 ஆபாச வீடியோ' பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு- கூட்டாளியாக பாஜக மாஜி எம்எல்ஏ சேர்ப்பு!
பெங்களூர்: கர்நாடகாவை உலுக்கிய 3,000 ஆபாச வீடியோக்களை எடுத்த முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா மீதான இந்த புதிய வழக்கில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ப்ரீத்தம் கவுடா உட்பட 3 பேர் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா ஹாசன் தொகுதி எம்பியாக இருந்தவர் பிரஜ்வல் ரேவண்ணா. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணாவின் 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையானது. இந்த வழக்கை கர்நாடகா சிஐடி போலீசார் விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அதேநேரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் கொடுத்த பெண்ணை கடத்தி சித்ரவதை செய்ததாக அவரது தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டார். தற்போது ரேவண்ணா ஜாமீனில் விடுதலையாகி இருக்கிறார். பிரஜ்வல் தாயார் பவானியும் இந்த வழக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கும் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா மீது அடுத்தடுத்து புகார்கள் குவிவதால் அவர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டும் வருகிறார்.
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா, இளம் பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி ஆபாசப்படம் எடுத்ததாக புதியதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா மீது இது 5-வது வழக்கு.
பிரஜ்வல் ரேவண்ணா மீதான இந்தப் புதிய வழக்கில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ப்ரீத்தம் கவுடா உட்பட 3 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வழக்கில் 4 பேர் மீதும் 355ஏ - பாலியல் தொல்லை கொடுத்தல்; 345பி ஆடைகளை கழற்ற அச்சுறுத்துதல், 66இ அந்தரங்க வீடியோ எடுத்தல் என மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ப்ரீத்தம் கவுடாவை விசாரணைக்கு அழைக்க சிஐடி போலீசார் சம்மன் அனுப்ப உள்ளனர்., ஆனால் ப்ரீத்தம் கவுடாவோ, என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆகையால் கருத்து தெரிவிக்க முடியாது என்றார். பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.வும் 3,000 ஆபாச வீடியோ பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் சிக்கியிருப்பது கர்நாடகாவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் ரேவண்ணா சில நாட்களுக்கு முன்னர் ஓரினச் சேர்க்கை புகாரில் கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications