மருமகள் முன்பு அநாகரீகம்.. அசிங்கமாக நடந்து கொண்ட மாமனார்.. அநியாயமாக பறி போன உயிர்
மருமகளை கத்தியால் குத்தி கொன்ற மாமனார் கைது செய்யப்பட்டார்
Recommended Video
பெங்களூரு: மருமகள் முன்பு திடீரென டிரஸ்களை கழட்டிவிட்டு அத்துமீறி நடந்துள்ளார் மாமனார்.. இறுதியில் ஒரு கொலை வரை சென்று.. அந்த அப்பாவி பெண்ணை மாமனார் கொலையே செய்துவிட்டார்!
கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள ராகி முத்தஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜு. விவசாயம் செய்து வந்த இவருக்கு அனில் என்ற மகன் உள்ளார்.

அனில், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு வீணா என்ற பெண்ணை திருமணம் செய்து, அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.
நல்லா இருந்த மாமனாருக்கு திடீரென கேடு வந்துவிட்டது.. சில மாதங்களாகவே புத்தி கெட்டு போய், மருமகளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மருமகள் வீணாவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வீணா செய்வதறியாது தவித்து நின்றார்.
கணவனிடம் சொன்னால், தேவையில்லாமல் குடும்பம் பிரிந்துவிடும், தந்தைக்கும், மகனுக்கும் பிரச்சனை வந்துவிடும் என்று குழம்பி தவித்தார். இப்படி கணவனிடம் மருமகள் சொல்லவில்லை என்பதை தெரிந்து கொண்டு மாமனார் இன்னும் அத்துமீறலில் அதிகமாக ஈடுபட ஆரம்பித்தார்.
இந்த சமயத்தில்தான் அனில் வெளியூருக்குவேலை விஷயமாக சென்றார். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட நாகராஜ், நைட் நேரத்தில் வீணாவிடம் நிறைய முறை தொல்லை தந்துள்ளார்.
பிறகு, திடீரென டிரஸ்களை கழட்டிவிட்டு, வீணா அறைக்குள் நுழைந்துள்ளார்.. கட்டாயப்படுத்தி மருமகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தும் உள்ளார்.. அப்போதுதான் வேறு வழியின்றி சத்தம் போட்டு கத்தினார் வீணா.
இப்படி வீணா சத்தம் போடவும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்துவிட்டனர். இதனால் பயந்துபோன நாகராஜ், அங்கே இருந்த கத்தியை எடுத்து மருமகளை சரமாரி குத்திவிட்டார். இதில் கீழே விழுந்து வீணா பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், வீணாவின் உடலை மீட்டு, நாகராஜை சிறையில் அடைத்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications