கஜா புயலால், பெங்களூர், ஒசூரில் மழை பெய்யுமா?
Recommended Video

பெங்களூர்: கஜா புயல் காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை இலாகா அறிவித்துள்ளது. இந்தப் புயலின் காரணமாக சென்னையில், இன்று, காலையில் பரவலாக மழை பெய்த நிலையில், பின்னர் வெயில் அடிக்கத்தொடங்கியது.
வழக்கமாக வங்க கடலில் புயல் உருவாகி சென்னையிலும் அதன் தாக்கம் எதிரொலித்தால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் அருகே உள்ள கர்நாடக தலைநகர் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலும் மழை பெய்வது வழக்கம்.

ஆனால் இம்முறை வியாழக்கிழமை மாலை வரையில் பெங்களூரில் மழைப்பொழிவு இல்லை. இதுகுறித்து, கர்நாடக வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, கஜா புயலின் தாக்கம் காரணமாக பெங்களூரில் வெள்ளிக்கிழமை மழைககு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். ஓசூரிலும், இதன் தாக்கம் இருக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், பெரிய அளவுக்கான மழையாக இல்லாமல், மிதமான மழையாகத்தான் இருக்கும் என்றும், சனிக்கிழமையும் கூட இந்த மழை தொடரும் என்றும், பெங்களூர் மட்டுமின்றி, மைசூர், ராம்நகர், தும்கூர் உள்ளிட்ட தெற்கு கர்நாடக பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இன்று பிற்பகலுக்கு மேல் பெங்களூரின் சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இருப்பினும் வெயில் வழக்கம்போலவே காணப்பட்டது.












Click it and Unblock the Notifications