கெடு விதித்த ஆளுநருக்கு செக் வைத்த குமாரசாமி! உச்சநீதிமன்றத்தில் வழக்கு
Recommended Video
பெங்களூர்: குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், முதல்வர் குமாரசாமி, சட்டசபையில் தாக்கல் செய்த நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று கர்நாடக ஆளுநர் கெடு விடுத்தார்.
நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை குமாரசாமி தாக்கல் செய்திருந்தாலும், பல்வேறு விவகாரங்கள் குறித்து சட்டசபையில் விவாதமும், அமளியும் நீடித்தது. எனவே நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே, சபாநாயகர் துணையுடன், கால விரையம் செய்கிறார்கள் என்று பாஜக சார்பில், ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் நேற்று புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் சபாநாயகருக்கு நேற்று மதியமே ஒரு கடிதம் எழுதி, இன்று (வியாழக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவு செய்ய பரிசீலனை செய்யுங்கள் என தெரிவித்தார்.
அதேநேரம், நேற்று சட்டசபை அலுவல் நேரம் முடிந்ததும், இன்று காலை 11 மணிக்கு அவையை ஒத்தி வைத்தார், சபாநாயகர். இதையடுத்து இரவோடு இரவாக, முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார் ஆளுநர். அதில், வெள்ளிக்கிழமை பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தார் ஆளுநர். அப்படியும் நடக்கவில்லை. எனவே இன்று மதியம் மீண்டும் குமாரசாமிக்கு கடிதம் எழுதிய ஆளுநர், வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குள், நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆளுநரின் கெடுவால், குமாரசாமி அரசு சிக்கலில் மாட்டியுள்ளது. எனவே, ஆளுநரின் உத்தரவு சரியில்லை, இது சட்டசபை மாண்புக்கு எதிரானது என்று, கூறி, உச்சநீதிமன்றத்தில் குமாரசாமி இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதன் மூலம், இன்றும் அவை நடவடிக்கை திங்கள்கிழமைக்கு இழுத்தடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆளுநர் உத்தரவை மீறிய குற்றச்சாட்டுக்கு ஆளாக கூடாது என்பதற்காக, வழக்கு தொடர்ந்துள்ளார் குமாரசாமி என்கிறார்கள்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications