மஞ்சள் அலர்ட்.. பெங்களூரில் செப்டம்பர் 9 வரை மழை வெளுக்க போகிறது.. அதிகரிக்கும் வெள்ளம்.. நிலை என்ன?
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செப்டம்பர் 9ம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெங்களூரில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
பெங்களூரில் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியவில்லை. பெங்களூரில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. உத்தர கர்நாடகா, தக்சின் கர்நாடகாவிற்கு இன்று தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட்.
இதில் பெங்களூருக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இந்த வருடம் இயல்பை விட 162 சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளது.

பெங்களூர்
கடந்த ஜூன் 1ம் தேதி அங்கு பருவமழை தொடங்கியது. இந்த வருடம் பருவமழை இதுவரை 162 சதவிகிதம் அதிகம் பெய்துள்ளது. இன்னும் 1 வாரத்திற்கு மழை பெய்யும் என்பதால் இந்த சதவிகிதம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் பெங்களூர், பெங்களூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை என்று பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 30ம் தேதியில் இருந்தே பெங்களூரின் அவுட்டர் ரிங் ரோட் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழை
இந்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது பெங்களூரின் அவுட்டர் ரிங் ரோட் பகுதிதான். அதேபோல் பெல்லந்தூரில் இருக்கும் RMZ Ecospace பகுதி, அதை ஒட்டிய சாலை முழுக்க தண்ணீர் தேங்கியது. மகாதேவபரா, மாரத்தஹள்ளி பகுதிகளிலும் இதனால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் அதிக டிராபிக் ஏற்படும் முக்கிய சந்திப்பான சில்க் போர்ட் சந்திப்பிலும் வெள்ளம் ஏற்பட்டது. எச்எஸ்ஆர் சாலை பகுதிகளிலும் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளம்
வெள்ளத்தைவிட சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகள், சேதங்கள்தான் மக்களை அதிகம் அச்சுறுத்தி வருகிறது. சாலைகளில் இருக்கும் குழிகள் காரணமாக மக்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மக்கள் குழிகளுக்குள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். வெள்ளத்தில் பல இடங்களில் வாகனங்கள் மிதந்து செல்லும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

வானிலை
பெங்களூரில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக அங்கு இருக்கும் ஐடி நிறுவனங்கள் சரியாக செயல்பட முடியாமல் தவித்து வருகின்றன. இதனால் அந்த ஐடி நிறுவனங்களுக்கு 225 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மழை வெள்ளத்தால் அங்கு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு டிராபிக் ஏற்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் என்று ஐடி ஊழியர்கள் பலர் டிராக்டர் பின்னால் அமர்ந்து அலுவலகம் சென்று கொண்டு இருக்கின்றனர். தண்ணீரில் டிராக்டர் மட்டுமே பாதிப்பு இன்றி செல்லும் என்பதால் இப்படி பயணம் மேற்கொள்கின்றனர்
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications