9 கி.மீ நீளமுள்ள எலக்ட்ரானிக் சிட்டி பாலமே ஸ்தம்பித்தது.. வண்டியை விட்டு நடந்துபோன ஐடி ஊழியர்கள்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூர் கடந்த சில நாட்களாக கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு பெய்த மழை காரணமாக, புறநகரான ஒசூர் சாலையில் அமைந்துள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து பெங்களூருக்குள் வர முடியாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக பாலத்தின் மீது ஒரே இடத்தில் நின்றிருந்தன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிப்படைந்தனர்.
இந்தியாவில் அதிகம் போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம் பெங்களூர்தான். ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, இங்கு வாகன பயன்பாடு என்பது அதிகரித்துள்ளது. பெங்களூர் நகரத்தில் மட்டும் சுமார் 1.1 கோடி வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில், பைக்குகளின் எண்ணிக்கை மட்டுமே 75.6 லட்சம். கார்கள் 23.1 லட்சம். இப்படி ரமணா விஜயகாந்த் மாதிரி புள்ளி விவரம் அள்ளி வீச முடியும். அதிக வாகனங்களால் அடிக்கடி டிராபிக் ஜாம் ஏற்படுவது வழக்கமானதாக இருக்கிறது.

இப்படி இருக்கையில், நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பெங்களூரில் வரலாறு காணாத அளவுக்கு டிராபிக் ஜாம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக எலக்ட்ரானிக் சிட்டியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக மக்கள் தங்கள் வாகனங்களில் காத்திருந்திருக்கின்றனர். எலக்ட்ரானிக் சிட்டி பாலம் சுமார் 9 கி.மீ தூரமுள்ளது. அதில் ஒரு பகுதியில் மழை நீர் தேங்கியதால், சிட்டிக்குள் வரும் பாதை மூடப்பட்டது. சிட்டியிலிருந்து வெளியேறும் பாதை வழக்கம் போல திறந்திருந்தது.
இதன் காரணமாக அலுவலகங்களிலிருந்து வீடு திரும்ப முயன்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சிலர் நிறுவனத்தின் டாக்ஸியிலிருந்து இறங்கி வீடுகளுக்கு நடக்க தொடங்கினர். எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்திற்கு டோல் வசூலிக்கப்படுகிறது. அதையும் கொடுத்துவிட்டு மக்கள் நடந்துபோனதை பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒர்க் பிரம் ஹோம் தராத கம்பெனிகளை ஐடி ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் வறுக்க ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து ஐடி ஊழியர்கள் கூறுகையில், "நாங்கள் 5.30க்கு அலுவலகத்திலிருந்து வெளியே வந்தோம். வீடு 30 கி.மீக்கு அப்பால் இருக்கிறது. வழக்கமாக 1.30-2 மணி நேரத்தில் வீட்டிற்கு சென்றுவிடுவோம். ஆனால் இன்று 3 மணி நேரத்திற்கும் மேல் நாங்கள் எலக்ட்ரானிக் சிட்டியில்தான் இருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
கடந்த 3 நாட்களுக்கு மேலாக பெங்களூரில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சுமார் 100 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வழக்கமாக வெள்ளம், தாழ்வான பகுதியை நோக்கி ஓடி நீர்நிலைகளில் கலந்துவிடும். ஆனால் கனமழை காரணமாக ஏரிகள் நிரம்பி, நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்திருந்ததால் வெள்ளம் வடிய வாய்ப்பில்லாமல் தேங்கி நின்றிருக்கிறது. மட்டுமல்லாது நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடுகளும், கட்டிடங்களும் கட்டப்பட்டிருப்பதால் வெள்ளம் தேங்கியிருக்கிறது.
மழை காரணமாக சுமார் 1500க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பெங்களூரின் சில பகுதிகளில் 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்திருக்கிறது. மழை காரணமாக புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த வீடு இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல மன்யாதா டெக் பார்க் முழுவதும் மழைநீர் வெள்ளம் போல சூழ்ந்திருக்கிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications