மருத்துவரை கிழித்து போட்ட நீர்யானை! கர்நாடகாவில் நடந்த ஷாக் சம்பவம்! 27 வயசுல இப்படியா நடக்கனும்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில், கர்ப்பமாக இருந்த நீர்யானைக்கு சிகிச்சையளிக்க வந்த விலங்கு நல மருத்துவரை, நீர்யானை தாக்கி கொன்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நீர்யானை தாக்கியதில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

கர்நாடக மாநிலம் சிவமொக்கா தயவரெகொப்பா சிங்கம் மற்றும் புலி சஃபாரியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. நீர்யானை தாக்கியதில் பயிற்சி கால்நடை அதிகாரி டாக்டர் சமீக்ஷா ரெட்டி (27) உயிரிழந்தார்.

Hippopotamus Attack

என்ன நடந்தது?

பெங்களூரைச் சேர்ந்தவர் டாக்டர் சமீக்ஷா ரெட்டி. இவர், தயவரெகொப்பா சிங்கம் மற்றும் புலி சஃபாரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இன்றும் கொஞ்ச நாட்களில் இவரது பயிற்சி நிறைவடைய இருந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்ட சன் கோனூர் பறவைகள் இரண்டின் நலம் கண்காணிக்கும் வேலை இவர் பார்த்து வந்தார். 19ம் தேதி இரவு 10.30 மணியளவில், கர்ப்பிணி நீர்யானை ஒன்றின் உடல் வெப்பநிலையைச் சரிபார்க்க முயன்றார். இந்த பணியில் ஈடுபட்டிருந்த போது,நீர்யானை திடீரென அவரைத் தாக்கியது.

எதிர்பாராத விபத்து

இதை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள், அவரை மீட்டனர். ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை, ஊழியர்கள் சிவமொக்கா தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு, ரத்தப்போக்கு தீவிரமாக இருந்ததால், சிகிக்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.

கடுமையான காயங்கள்

மருத்துவர்கள் இது குறித்து கூறுகையில், அவருக்கு ஆழமான காயங்கள் ஏற்பட்டு அதிக இரத்தப்போக்கு இருந்ததாகவும், இதனால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளனர். இது மாரடைப்புக்கு வழிவகுத்தது. நேற்று காலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி சமீக்ஷா ரெட்டி உயிரிழந்தார். சமீக்ஷா ரெட்டி பயிற்சி கால்நடை அதிகாரியாகப் பணிபுரிந்ததோடு, அவருக்கு மேலும் 45 நாட்கள் பயிற்சி இருந்தது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமைச்சர் உத்தரவு

வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே, உயிரிழந்த சமீக்ஷா ரெட்டிக்கு இரங்கல் தெரிவித்து, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) கண்டிப்பாகப் பின்பற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்து, அறிக்கை சமர்ப்பிக்கவும் அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே உத்தரவிட்டார். நீர்யானை தாக்கியதில், பயிற்சி மருத்தவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நீர்யானைகள் ஏன் ஆபத்தானவை?

நீர்யானைகள் இயல்பில் மிகவும் ஆபத்தானவை. ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சிங்கம் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதை விட, நீர்யானைகள் தாக்கிதான் அதிக அளவில் மனிதர்கள் உயிரிழக்கிறார்கள். நீர்யானைகள் எந்த முன்னெச்சரிக்கையைின்றி தாக்கும் குணம் கொண்டது. ஒரே கடியில் முதலையைகூட, இரண்டு துண்டாக்கிவிடும் வலிமை கொண்டது. எனவேதான் நீர்யானைகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+