கர்நாடகா முதல்வராக சித்தராமையா தேர்வானது எப்படி தெரியுமா? காரணம் இதுதான்.. போட்டுடைத்த சீனியர் தலை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவின் அடுத்த முதல்ரவாக காங்கிரஸ் சார்பில் சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சற்று நேரத்தில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் நிலையில் டிகே சிவக்குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சித்தராமையாவை காங்கிரஸ் கட்சி எப்படி முதல்வராக தேர்வு செய்தது பற்றி முக்கிய புள்ளி விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால் அதனை பாஜகவால் எள்ளவும் அசைக்க முடியாத நிலை உள்ளது. இந்த தேர்தலில் பாஜக 66 இடங்களில் மட்டுமே வென்றது. மாறாக ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றனர்.

How Congress high command Chosen Siddaramaiah for Karnataka? Satish Jarkiholi explains

இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் பதவிக்கான ரேஸில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. டெல்லியில் இன்று ராகுல் காந்தி சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாரை தனித்தனியே சந்தித்து பேசினார். நேற்று மல்லிகார்ஜூன கார்கே இருவரிடமும் தனித்தனியே பேசிய நிலையில் இந்த சந்திப்பு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மேலும் தேர்தல் முடிவு வந்து இன்றுடன் 4வது நாள் ஆகும் நிலையில் முதல்வர் பொறுப்பை இருவரில் யாருக்கு வழங்குவதில் என்பதில் குழப்பம் நீடித்ததால் இன்றைய ராகுல் காந்தி உடனான சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதோடு இன்று அடுத்த கர்நாடகா முதல்வரின் பெயர் இறுதி செய்யப்படும் என்ற தகவலும் வெளியானது.

அதன்படி ராகுல் காந்தி உடனான சந்திப்பின்போது சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. மாறாக டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவிழ கொடுப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாறாக டிகே சிவக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

How Congress high command Chosen Siddaramaiah for Karnataka? Satish Jarkiholi explains

இந்நிலையில் தான் சித்தராமையா எப்படி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் என்பது பற்றி கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சதீஷ் ஜார்கிகோளி விளக்கிஉள்ளார். பெலகாவி மாவட்டம் எமகனமரடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சதீஷ் ஜார்கிகோளி, சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் பதவிக்கு சித்தராமையா தேர்வு செய்யப்பட்டத எப்படி என்பது பற்றி விளக்கி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் தேர்தல் முடிந்த கையோடு எம்எல்ஏக்களின் சபை நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வராக யார் வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வகையில் ரகசிய ஓட்டெடுப்பு நடந்தது. இந்த ரகசிய ஓட்டெடுப்பில் சித்தராமையாவுக்கு அதிகமான எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த அடிப்படையில் தான் அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சித்தராமையாவுக்கு முதல்வராக இருந்த அனுபவம் உள்ளது. முழுமையாக 5 ஆண்டுகள் அவர் முதல்வர் பதவியை நிர்வகித்துள்ளார். அவர் முதல்வராக பதவியில் இருந்தபோது நல்ல முறையில் ஆட்சியை வழங்கினார். இந்த முறையும் அவர் நல்லாட்சி வழங்குவார். இந்த நம்பிக்கை காங்கிரஸ் கட்சிக்கும், மக்களுக்கும் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+