Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகாலையில் மாந்திரீக பூஜை.. கனரா வங்கியில் ரூ.53 கோடி தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது எப்படி?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலம் விஜயாப்புராவில் உள்ள கனரா வங்கிக்கு கடந்த மே மாதம் 25ம் தேதி கொள்ளையர்கள் சென்றுள்ளனர். அங்கு கொள்ளையடிக்கும் முன்பு வங்கி கட்டிடத்தில் வைத்து மாந்திரீக பூஜை செய்துள்ளனர். பின்னர் வங்கிக்குள் புகுந்து ரொக்க பணம் மற்றும் அடமானம் வைத்த தங்க நகைகள் என 53 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துள்ளனர். அவர்கள் போகும் போகுது சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கையும் தூக்கி சென்றுள்ளனர். எப்படி கொள்ளை நடந்தது என்பதை பார்ப்போம்.

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேவாடி தாலுகா மனகூலி பகுதியில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இரவு நேர காவலாளி இல்லை என்று கூறப்படுகிறது.இதனை துல்லியமாக கவனித்த கொள்ளை கும்பல், கொள்ளையடிக்க திட்டமிட்டது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 25-ந் தேதி இரவு இந்த வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளது.

How was gold jewellery worth Rs 53 crores looted from Vijayapura Canara Bank in Karnataka

மாந்திரீக பூஜை

அங்கு கொள்ளையடிப்பதற்கு முன்னதாக வங்கி கட்டிடத்தில் வைத்து கொள்ளையர்கள் மாந்திரீக பூஜை செய்துள்ளனர். தொடர்ந்து அந்த கொள்ளை கும்பல் வங்கியில் இருந்த இரும்பு பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்திருக்கிறார்கள். பின்னர் அதில் இருந்த தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்கள்.

அடகு நகைகள்

இதுகுறித்து மறுநாள் வந்த தகவலின் பேரில், மனகுலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்துக்கு விஜயப்புரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லட்சுமண் நிம்பரகி சென்று ஆய்வு நடத்தினார். முதற்கட்ட விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. ஏனெனில் அவை வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்க நகைகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

வங்கி ஊழியர்கள் தகவல்

இதையடுத்து வங்கி மேலாளர், காசாளர் மற்றும் ஊழியர்கள் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில கொள்ளையடித்த தங்க நகைகளின் மதிப்பு நேற்று முழுமையாக கணக்கிடப்பட்டது. அந்த தகவலை வங்கி ஊழியரக்ள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

53 கோடி ரூபாய் நகைகள்

இதுகுறித்து விஜயாப்புரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லட்சுமண் நிம்பரகி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, "கனரா வங்கி கொள்ளை வழக்கில், கொள்ளைப்போன தங்க நகைகள் குறித்த மதிப்பு விவரத்தை வங்கி ஊழியர்கள் கூறினார்கள். அதில் ரூ.53 கோடி மதிப்பிலான 58 கிலோ தங்க நகைகள், ரூ.5.20 லட்சம் ரொக்கம் கொள்ளை போயிருப்பது தெரியவந்துள்ளது.

எத்தனை பேர் வந்தார்கள்

இந்த கொள்ளையில் 6 முதல் 8 பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் ஒரு பெட்டகத்தில் இருந்த தங்கநகைளை மட்டும் கொள்ளையடித்தனர். மற்றொரு பெட்டகத்தில் கை வைக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவத்துக்கு முன்னதாக வங்கிக்குள் கொள்ளையர்கள் மாந்திரீக பூஜை செய்திருக்கிறார்கள். மேலும் வங்கியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா இணைப்புகளை துண்டித்திருக்கிறார்கள். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் டி.வி.ஆரையும் அவர்கள் திருடி சென்றுவிட்டார்கள்.

8 தனிப்படை அமைப்பு

இதனால் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எனினும் வங்கி அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அனைத்தையும் கைப்பற்றி, கொள்ளையர்களை அடையாளம் கண்டு வருகிறோம். அவர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்திருக்கிறோம். 8 தனிப்படை போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மர்மநபர்களை கைது செய்யும்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்" இவ்வாறு விஜயப்புரா மாவட்ட எஸ்பி லட்சுமண் நிம்பரகி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+