மக்கள் ஷாக்.. உடைந்தது ஹுலிமாவு ஏரி.. நீரில் மூழ்கிய கார்கள், பைக்குகள்.. எங்கெங்கும் வெள்ளம்.. !
Recommended Video
பெங்களூரு: கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்துவிட்டது.. பெங்களூர், ஹுலிமாவு ஏரிக்கரை உடைந்ததில், வெள்ள நீர் புகுந்து ஊரே நீரில் மிதந்தது. 1000 குடும்பங்கள் வெள்ளத்தில் தவித்து வருகின்றன.
பெங்களூருவின் ஹூலிமாவு பகுதியில் உள்ளது பெரிய ஏரி. திடீரென ஏரி கரையின் ஒரு பகுதி இடிந்துவிட்டது. இதனால், அங்கிருந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது.
ஏரி உடைந்து தண்ணீர் வந்துவிடும் என்று அந்த பகுதி மக்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

உடைப்பு
இந்த திடீர் சம்பவம் குறித்து மேயர் கவுதம் குமார் சொல்லும்போது, "அந்த பகுதியில் ஏரி கரை குடிநீர் குழாயில் போர்வெல் போடுபவர்களின் உதவியுடன் இணைப்பை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. அந்த சமயத்தில்தான் எதிர்பாராத விதமாக ஏரி கரையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுவிட்டது.

துரித பணி
இதனால் ஏரி நீர் முழுசும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றுவிட்டது. இதனால் 1000 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மேலும் இவர்களை தவிர, நிறைய பைக், கார்களும் வெள்ள நீரில் மிதக்கின்றன. முதலில் 1000 குடும்பங்களை சேர்ந்தவர்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும்.

விசாரணை
அதுவரை அவர்களுக்கு தேவையான சாப்பாடு உள்ளிட்ட பிற உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் ஏரிகரையின் உடைப்பும் சரி செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, ஏரியில் உடைப்பை ஏற்படுத்தியவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

மீட்பு பணி
வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட இப்பகுதிகளின் போட்டோக்களும் தற்போது வெளியாகி உள்ளன. நடுரோட்டிலேயே கார்களும், பைக்குகளும் முழுவதாகவும், முக்கால்வாசியும் மூழ்கியபடி காணப்படுகின்றன.. மீட்பு படையினர் முதியோர் உள்ளிட்ட அனைவரையுமே பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர்.
|
அங்கலாய்ப்பு
இதற்கிடைய, திட்டமிடாத நகரமயமாக்கல்தான் பெங்களூரை இந்த அளவுக்கு சீர்குலைத்து வருகிறது. ஏரிகளை அழிக்கிறார்கள் அல்லது இப்படி சட்டவிரோதமாக போர்வெல் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து ஊரையே வெள்ளக்காடாக்கி விடுகிறார்கள். இதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் பெங்களூர் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்று சமூக வலைதளங்களில் மக்கள் அங்கலாய்த்து வருகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications