அக்காவை பிரிந்ததால் கோபம்! அத்தான் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ‛நம்பியார்’ கால டெக்னிக்கால் கைது
பெங்களூர்: அக்காவை விவாகரத்து செய்த அத்தானை போலீசில் சிக்க வைக்கும் நோக்கத்தில் ‛நம்பியார்' காலத்து ‛டெக்னிக்'கை பயன்படுத்தி பெங்களூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு தினமும் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன.
இதனால் எப்போதும் விமான நிலையம் கூட்டம் நிறைந்து காணப்படும். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்
இந்நிலையில் நேற்று அதிகாலை 3.50 மணியளவில் விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது வெடித்து சிதற உள்ளதாகவும் கூறி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் பேசினார். அப்போது அந்த நபர் தனது பெயரை தீபக் எனக் கூறினார். அதன்பின் உடனடியாக இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் விமான நிலையம் முழுவதுமாக தீவிரமாக சோதனையிட்டனர்.

‛புரளி’ என உறுதி
விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணி வரை தேடியபோதும் வெடிகுண்டு உள்ளிட்ட எந்த பொருளும் கிடைக்கவில்லை. இதன்மூலம் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரிக்க துவங்கினர். இதில் முக்கிய தகவல்கள் கிடைத்தன.

கைது
அதனடிப்படையில் பெங்களூர் வில்சன் கார்டனில் உள்ள விடுதியில் வசித்த சுபாசிஷ் குப்தா என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வெடிகுண்டு மிரட்டலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர்.

அத்தானை பழிவாங்க...
இந்த விசாரணையின்போது அவரது அக்காவை தீபக் என்பவர் திருமணம் செய்தார். சமீபத்தில் அக்காவை தீபக் விவாகரத்து செய்தார். இதனால் அத்தானான தீபக்கை பழிவாங்க சுபாசிஷ் குப்தா முடிவு செய்தார். இதனால் தீபக் பெயரில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. மேலும் கைதான நபர் சிறிதுகாலம் பெங்களூர் விமான நிலையத்தில் பணி செய்ததாக தெரிவித்த போலீசார் அவர் தனது சொந்த செல்போன் எண்ணில் இருந்து பேசிவிட்டு வெறும் பெயரை மட்டும் மாற்றி கூறி மிரட்டல் விடுத்ததால் எளிமையாக பிடித்துவிட்டோம் என்றனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications