ஏரோபிளேன் மோடுக்கு எண்டு கார்டு.. விமானத்தில் இணையதள சேவை.. இஸ்ரோ குட்நியூஸ்
பெங்களூர்: இந்தியாவில் விமானத்தில் பயணிக்கும் போது இணையதள சேவையை பயன்படுத்த முடியாது. ஏனெனில் விமான நிலையங்களில் இருந்து விமானிகளுக்கு கிடைக்க வேண்டிய தகவல்கள் தடைப்பட கூடும் என்பதால் தான், இந்த சேவை தரப்படுவது இல்லை. இந்நிலையில் இந்திய வானத்தில் இணைய சேவை விரைவில் கிடைக்க போகிறது. இஸ்ரோ அதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது.
இந்திய வானில் விமானங்களில் செல்லும் போது, இணையதள சேவையை விமான பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. ஏனெனில் விமான நிலையங்களில் இருந்து விமானிகளுக்கு கிடைக்க வேண்டிய தகவல்கள் தடைப்பட கூடும் என்பதால் இந்த வசதி கிடைக்கவில்லை. எனினும் இந்திய விமானங்களில் இணைய இணைப்பு சேவை அண்மைக் காலங்களில் மிக குறைந்த அளவில் உள்ளது. இந்த சேவையை முழுமையாக பெற முடியாது..

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த தகவல் தொடர்பு நிறுவனமான வியாசாட் என்ற உலகளாவிய செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனம் இந்திய வானத்தில் இணைய இணைப்பை வழங்க முடியும் என்று அறிவித்துள்ளதால் எல்லாமே மாற போகிறது. இஸ்ரோ உடன் இணைந்து இணைய சேவை வழங்க போகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இதுதொடர்பான செயற்கைகோளை விண்ணில் ஏவ இருக்கிறது. இது வெற்றிகரமாக நடந்தால், மிக உயர் தொழில்நுட்ப செயற்கைகோள் 'ஜிசாட்-20' துணையுடன் விமானத்தில் இணையதள சேவையும் விமானங்களில் சாத்தியமாகும்.
இஸ்ரோவின் கீழ் செயல்படும், பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மையம் இந்த உயர் செயல்திறன் செயற்கைகோளை உருவாக்கி உள்ளது. இந்த உயர் செயல்திறன் செயற்கைகோள் எப்படி என்றால், பாரம்பரிய செயற்கைகோள்களை விட அதிக விகிதத்தில் தரவை அனுப்பக்கூடிய தகவல் தொடர்பு செயற்கைகோள் ஆகும்.
இது செயற்கைகோள் அடிப்படையிலான இணைய இணைப்பை வழங்கும். அத்துடன், ஐந்தில் ஒரு பங்கு திறனில் விமானத்தில் இணையதள சேவையை வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. தொலைதூர இடங்களை இணைப்பது என்பது உலகளாவிய செயற்கைகோள் தகவல் தொடர்பு நிறுவனமான வியாசாட் இன்க் இந்த திட்டத்தை இஸ்ரோவுடன் இணைந்து செயல்படுத்த போகிறது.
இந்திய ஆயுதப்படைகளுக்கு ஏற்கனவே மிகப்பெரிய அளவில் இணைய இணைப்புகள் செயற்கை கோள் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்தியாவில் விமானத்தில் இணைய வசதி இல்லாத குறை நீடித்து வந்தது. இந்த குறையை நிவர்த்தி செய்ய தற்போது வியாசாட் மற்றும் இஸ்ரோ இணைந்துள்ளன. இதன் மூலம் விரைவில் விமானங்களில் இணைய சேவை கிடைக்க போகிறது..
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications