Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிப்.6ல் விண்ணில் பாய்கிறது ஜிசாட் 31… இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ தீவிரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு:இஸ்ரோவின் 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்-31 செயற்கைகோள், ஃபிரெஞ்ச் கயானாவிலிருந்து வரும் 6ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக தொடங்கி உள்ளன.

நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக, அதி நவீன செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில், 40-வது செயற்கை கோளாக ஜிசாட்-31-ஐ இஸ்ரோ தயாரித்துள்ளது.

Isro all set for gsat-31 launch on february 6

2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்ட இந்த ஜிசாட்-31 செயற்கைகோள், பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் வரும் 6ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு விண்ணில் பயணித்து சேவையாற்ற உள்ள இந்த செயற்கைகோளால், இந்தியாவின் மையப்பகுதியும், தீவுப்பகுதியும் பலன் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிடிஹெச் சேவை, டிவி ஒளிபரப்பு உள்ளிட்டவற்றுக்கும் ஜிசாட்-31 செயற்கைகோள் பயன்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செயற்கைகோளை ஏவும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+