Thug Life ரூ 300 கோடி பட்ஜெட்னா கமல் மன்னிப்பு கேட்கலாமே! சிவராஜ்குமாருக்கும் சிக்கல்! சாடிய நீதிபதி
பெங்களூர்: தக் லைஃப் பட விவகாரத்தில் கன்னட மொழி குறித்து சர்ச்சை கருத்து கூறிய கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை எப்போதோ முடிந்திருக்குமே! இவரால் சிவராஜ்குமாருக்கும் பிரச்சினை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கமல் நடிப்பில் தக் லைஃப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. 38 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் சிம்பு, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, த்ரிஷா, அசோக்செல்வன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசிய போது தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்ற கருத்தை சிவராஜ்குமார் முன்னிலையில் வைத்தார். கமலை சித்தப்பாவாக கருதும் சிவராஜ்குமாரும் , "சித்தப்பா"வின் கருத்துக்கு ஆமோதித்தார்.
இது கர்நாடகாவில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்திவிட்டது. தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாக வேண்டும் என்றால் கமல்ஹாசன் தான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கேட்டனர்.
ஆனால் கமல்ஹாசனோ அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என கூறி மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இதனால் இந்த பிரச்சினை மேலும் பெரிதானது. இந்த நிலையில் தனது பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படம் வெளியிட விடமாட்டோம் என கன்னட அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தினர்.
மன்னிப்பு கேட்காமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டர்களை கொளுத்துவோம் என கன்னட அமைப்புகள் மிரட்டியதால் கன்னட சினிமா விநியோகஸ்தர்கள் சங்கமும் இந்த படத்தை வெளியிட மாட்டோம் என தெரிவித்துவிட்டன.
இந்த நிலையில் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகும் போது தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டு மன்னிப்பு கேட்க முடியாது என சொல்கிறீர்கள். ரூ 300 கோடி செலவில் படம் எடுத்துள்ள நீங்கள் மன்னிப்பு கேட்க தயங்குவது ஏன், மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை எப்போதே முடிந்திருக்குமே!
தக் லைஃப் படம் கர்நாடகாவில் ஓட வேண்டும், சில கோடி லாபம் பார்க்க வேண்டும் என நினைத்தால் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் பேசிய கருத்தை திரும்ப பெற முடியாது, மன்னிப்பு ஒன்று தான் தீர்வு. உங்களால் சிவராஜ்குமாருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தார்.
இந்த வழக்கு இன்று 2.30 மணிக்கு விசாரணைக்கு வரும் நிலையில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications