வீரியமான காவிரி போராட்டம்! கர்நாடகா பந்த்தில் திரளாக பங்கேற்ற நடிகர், நடிகைகள்! யாரெல்லாம் தெரியுமா
பெங்களூர்: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடகாவில் பந்த் நடத்தப்பட்டது. இதற்கு கன்னட திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் பதாகைகளுடன் களமிறங்கி ஆதரவு தெரிவித்தனர்.
கர்நாடகா-தமிழ்நாடு இடையேயான காவிரி நீர் பங்கீடு செய்வது தொடர்பான பிரச்சனை தற்போது விஸ்வரூபமாகி உள்ளது. கர்நாடகாவில் மழை இல்லை எனக்கூறி கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது.

தமிழக அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றத்தை அணுகி தமிழகத்துக்கான நீரை பெற்று வருகிறது. இந்நிலையில் தான் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு சார்பில் தமிழகத்துக்கு காவிரியில் 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை அக்டோபர் 15ம் தேதி வரை திறக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை அப்படியே ஏற்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டுக்கு மீண்டும் தண்ணீர் திறக்கும் நிலைக்கு கர்நாடகா தள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கூடாது என போராட்டங்கள் விஸ்வரூபமெடுத்துள்ளன. மண்டியா பந்த், பெங்களூர் பந்த் ஆகியவற்றை தொடர்ந்து கர்நாடகா பந்த் நடத்தப்பட்டது. காலை 6 மணிக்கு தொடங்கிய பந்த் மாலை 6 மணி வரை நடந்து வருகிறது. இன்றைய பந்த் போராட்டத்துக்கு வாட்டாள் நாகராஜ் தலைமை வகிக்கும் ஒருங்கிணைந்த கன்னட அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் டவுன் ஹாலில் இருந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வாட்டாள் நாகராஜை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் கைது செய்தனர். இந்நிலையில் தான் இன்றைய பந்த்தில் கன்னட சினிமா துறையினர் பங்கேற்றனர். பெங்களூரில் உள்ள குருராஜ் கன்வென்சன் மையத்தில் திரண்டு அவர்கள் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

நடிகர்கள் சிவராஜ் குமார், தர்ஷன், துருவ் சர்ஜா, துனியா விஜய், நடிகை பூஜா காந்தி உள்பட ஏராளமான நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். இந்த வேளையில் ‛காவிரி போராட்டம்.. காவிரிக்காக போராட்டம்' என எழுதப்பட்டு இருந்த பதாகைகளை அவர்கள் கையில் வைத்திருந்தனர். அப்போது பல நடிகர், நடிகைகளும் ‛‛கர்நாடகாவில் தண்ணீர் இல்லாதபோது தமிழகம் தண்ணீர் கேட்பது நியாயமில்லை. இதனால் காவிரி பிரச்சனைக்கு இருமாநில அரசும் பேசி தீர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இன்றைய கர்நாடகா பந்த் என்பது பெங்களூர் மற்றும் ஓல்டு மைசூர் மாவட்டங்களான பெங்களூர் புறநகர், ராமநகர், மண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மத்திய கர்நாடகா, வடகர்நாடகா மாவட்டங்களில் பந்த் பிசுபிசுத்துப்போனது. அங்கு மக்கள் இயல்பு வாழ்க்கையை நடத்தினர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications