Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மரத்தில் தூக்கில் தொங்கிய பாஜக வாக்குச்சாவடி பிரமுகர்.. கர்நாடகாவில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜகவைச் சேர்ந்த தேர்தல் வாக்குச்சாவடி முகவர் ஒருவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஜேடிஎஸ் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பதில் பெரும் போட்டி இருந்தது. தேர்தல் கடந்த மே 10ம் தேதி முடிந்தது.

 Karnataka : A BJP polling agent found hanging from tree in Kalaburagi district

இந்த சூழலில் கடந்த மே 11ம் தேதி அன்று கர்நாடகாவின் கலபுராகி மாவடட்த்தில் உள்ள சின்சோலி தாலுகாவில் உள்ள சாகலர் பசன்பூர் என்ள கிராமத்தில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை மரத்தில் இருந்து இறக்கி, அவர் யார் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெயர் ராமு ரத்தோட் என்பதும் அவர் பாஜக சார்பில் வாக்குச்சாவடி முகவராக கடந்த மே 10ம் தேதி பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். ஆனால் உயிரிழந்த பாஜக பிரமுகரின் உறவினர்கள், இந்த சாவில் சந்தேகம் இருப்பதாகவும், வழக்கை சந்தேக மரணமாக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+