ஓகே.. கோலார் வேண்டாம்.. வருணாவிலேயே போட்டி போடுறேன்.. ராகுல் எச்சரிக்கையால் மனம்மாறிய சித்தராமையா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் சித்தராமையா தொகுதி மாறி கோலாரில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் தற்போது சித்தராமையா தனது சொந்த தொகுதியான மைசூர் மாவட்டம் வருணாவில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
வருணா தொகுதியில் அவரது மகன் யதீந்திரா எம்எல்ஏவாக உள்ள நிலையில் தந்தைக்காக அவர் தியாகம் செய்ய உள்ளார். இந்நிலையில் தான் சித்தராமையாவின் மனமாற்றத்துக்கு பின்னணியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே கொடுத்த எச்சரிக்கை இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்று கர்நாடகா. இங்கு மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2018 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. 5 ஆண்டு முடிவடையும் நிலையில் இன்னும் 2 மாதத்துக்குள் தேர்தல் நடைபெற உள்ளது.
அநேகமாக கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் மாநிலம் முழுவதும் யாத்திரைகள் நடத்தி வருகின்றன. மேலும் ஆம்ஆத்மி, ஜேடிஎஸ் சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் கர்நாடகாவில் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முகமாக பார்க்கப்படும் சித்தராமையா தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தால் சித்தராமையா முதல்வராக வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியில் கடந்த முறை வென்ற நிலையில் நடைபெற உள்ள தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். இங்கு சித்தராமையா சார்ந்த குருபா சமுதாயத்தினர் மற்றும் முஸ்லிம் மக்கள் வெற்றியை நிர்ணயிக்கும் அளவில் உள்ளதால் அவர் கோலார் தொகுதியில் கண்வைத்தார்.
இருப்பினும் கூட கட்சி தலைவர்கள் இடையேயான பிரச்சனை என்பது அவருக்கு மைனஸாக பார்க்கப்பட்டது. இதனை தான் உள்கட்சி சர்வேயும் எதிரொலித்தது. அதாவது கோலார் தொகுதியில் சித்தராமையா போட்டியிட்டால் வெற்றி என்பது சாதாரணமாக இருக்காது. கட்சி தலைவர்கள் இடையே நிலவும் கருத்து வேறுபாடு தான் இதற்கு காரணம் என உள்கட்சி சர்வே தெரிவித்தது. இதை குறிப்பிட்டு டெல்லியில் நடந்த ஆலோசனையில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே சித்தராமையாவுக்கு அறிவுறுத்தினர். அதன்படி வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள சொந்த தொகுதியான வருணாவில் போட்டியிடும்படி கூறினர்.
வருணா என்பது மைசூர் மாவட்டத்தில் உள்ளது. இது சித்தராமையாவின் செந்த தொகுதியாகும். 2013 தேர்தலில் இங்கு வெற்றி பெற்ற சித்தராமையா முதல்வரானார். ஆனால் கடந்த 2018 தேர்தலில் வருணா தொகுதியை அவர் தனது மகன் யதீந்திராவுக்கு விட்டு கொடுத்தார். இதில் யதீந்திரா வெற்றி பெற்றார். மாறாக சித்தராமையா மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி மற்றும் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் போட்டியிட்டார். இதில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோற்ற சித்தராமையாக பாதாமியில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரைப்படி சித்தராமையா மீண்டும் வருணா தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
இதனை இன்று சித்தராமையா உறுதி செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நான் வருணா தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். இந்த தேர்தலில் மட்டும் 25 தொகுதிகளை சேர்ந்த ஆதரவாளர்கள் தங்களது தொகுதியில் போட்டியிட வரும்படி அழைத்தனர். எனது குடும்பத்தினர் வருணாவில் போட்டியிட கூறினர். இதனால் வருணாவில் இருந்து போட்டியிட அனுமதிக்கும்படி கட்சி மேலிடத்திடம் கூற உள்ளேன்''என்றார். இதன்மூலம் சித்தராமையா வருணாவில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
மகன் யதீந்திரா நிலை என்ன?
மேலும் வருணா தொகுதியில் சித்தராமையின் மகன் யதீந்திரா தற்போது எம்எல்ஏவாக உள்ளார். கடந்த தேர்தலில் மகனுக்காக தந்தை சித்தராமையா வருணா தொகுதியை விட்டு கொடுத்த நிலையில் இந்த தேர்தலில் தந்தை சித்தராமையாவுக்காக மகன் யதீந்திரா அந்த தொகுதியை விட்டு கொடுக்க உள்ளார். மேலும் யதீந்திரா வேறு தொகுதியில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகவில்லை. இது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போது உறுதியாகிவிடும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications