சிறுமி பலாத்கார வழக்கு:80 வயது பாஜக எடியூரப்பா நாளை விசாரணைக்கு ஆஜராகிறார்! எல்லாமே சதி என புலம்பல்!
பெங்களூர்: 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 80 வயதாகும் கர்நாடகா முன்னாள் முதல்வரான பாஜகவின் எடியூரப்பா நாளை சிறப்புப் புலனாய்வுக் குழு முன்பாக விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார்.
கர்நாடகா முதல்வராக இருந்த எடியூரப்பா 75 வயதைக் கடந்ததால் பாஜக மேலிடத்தால் கட்டாயமாக பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதேநேரத்தில் கர்நாடகாவில் லிங்காயத்துகளின் வாக்குகள் தேவை என்பதற்காக கட்சிப் பதவிகளில் எடியூரப்பா நீடித்தும் வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் எடியூரப்பா மீது 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெங்களூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுத் தாக்கல் செய்திருந்தார். அதேநேரத்தில் இந்த வழக்கை கர்நாடகா அரசு, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்றியது. இதனையடுத்து எடியூரப்பாவை விசாரணைக்கு ஆஜராக சிறப்புப் புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியிருந்தது.
இதனிடையே எடியூரப்பா மீது புகார் கொடுத்த சிறுமியின் தாயார் திடீரென மரணம் அடைந்தார். ஆனால் நுரையீரல் புற்றுநோயால் சிறுமியின் தாயார் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து எடியூரப்பாவை போக்சோவில் கைது செய்ய கோரி சிறுமியின் சகோதரர் நீதிமன்றத்தை நாடினார். இதனால் எடியூரப்பாவை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது போக்சோ நீதிமன்றம். இந்த உத்தரவைத் தொடர்ந்து எடியூரப்பா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் எடியூரப்பாவோ டெல்லிக்கு சென்று பதுங்கிவிட்டார். இதனால் கர்நாடகா சிறப்புப் புலனாய்வுக் குழுவும் டெல்லி சென்றது. மேலும் தம்மை கைது செய்ய தடை விதிக்க கோரி நீதிமன்றத்துக்குப் போனார் எடியூரப்பா. இதனை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 17-ந் தேதி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு எடியூரப்பா ஆஜராக வேண்டும்; அதுவரை எடியூரப்பாவை கைது செய்யக் கூடாது என தடை விதித்தது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து பெங்களூர் திரும்பிய எடியூரப்பா, தாம் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு நாளை (ஜூன் 17) ஆஜராக இருக்கிறேன். நான் யார் மீதும் எந்த குற்றமும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் யாரெல்லாம் எனக்கு எதிராக சதி செய்தனர் என தெரியும் என்றார்.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications